கர்நாடகா தேர்தல்: 'ட்விஸ்ட்' காந்திநகரில் ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர் அதிமுக வேட்பாளராக அங்கீகரிப்பு?
பெங்களூர்: கர்நாடகாவில் ஓபிஎஸ் அணி சார்பில் காந்திநகர் சட்டமன்ற தொகுதியில் குமார், கோலார் தங்கவயல் தொகுதியில் அனந்தராஜா ஆகியோர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்தனர். இவர்கள் இருவரின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காந்திநகரில் அதிமுக வேட்பாளர் என குறிப்பிட்டு குமாரை தேர்தல் ஆணையம் அங்கிகரித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடக்கிறது. கர்நாடகாவில் ஆளும் பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட அதிமுக விரும்பியது.ஆனால் பாரதிய ஜனதா இதை ஏற்கவில்லை. இதனால் அதிமுக தனித்து களம் காண விரும்பியது.
அதன்படி, புலிகேசி நகரில் அதிமுக வேட்பாளர் அன்பரசன் அதிமுக வேட்பாளாக அறிவிக்கப்பட்டார். அதன்படி, புலிகேசிநகர் தொகுதியில் அன்பரசன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முடிந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
அதன்படி, நடைபெற்ற வேட்பு மனுவில் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பரசன் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருப்பதால் அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளார். அதே வேளையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் ஓ.பன்னீர் செல்வமும் 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்தார்.
புலிகேசிநகர், காந்திநகர், கோலார் தங்கவயல் ஆகிய தொகுதிகளில் ஓபிஎஸ் வேட்பாளர்களை அறிவித்தார். புலிகேசிநகரில் நெடுஞ்செழியனும், காந்திநகரில் குமாரும், கோலார் தங்கவயலில் அனந்தராஜாவும் ஒபிஎஸ் அணி சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு பரிசீலனையின் போது இன்று புலிகேசி நகர் தொகுதியில் நெடுஞ்செழியனின் மனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்யப்பட்டது.
வங்கி கணக்கு இல்லாதது, ஆவணங்களில் கையெழுத்து போடாமல் இருந்தது என முறையாக ஆவணங்கள் இல்லாத காரணங்களால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. எனினும், காந்திநகர் சட்டமன்ற தொகுதியில் குமார், கோலார் தங்கவயல் தொகுதியில் அனந்தராஜாஆகிய 2 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காந்திநகரில் அதிமுக வேட்பாளராக குமாரை தேர்தல் ஆணையம் அங்கிகரித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, வேட்பாளர் பெயர் பட்டியலில், காந்தி நகர் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் அணி வேட்பாளரான குமாரின் பெயருக்கு நேராக கட்சி என்ற இடத்தில் அதிமுக என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருக்கும் நிலையில், ஓபிஎஸ் அணி வேட்பாளரை அதிமுக என குறிப்பிட்டு இருப்பது பரபரப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில், கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் அணி வேட்பாளர் அனந்தராஜாவின் மனு ஏற்கப்பட்டு இருந்தாலும், அவருக்கு அதிமுக எனக் குறிப்பிடவில்லை என்று கூறப்படுகிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications