Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகா தேர்தல் தோல்வி! பாஜக தலைமைக்கு எதிர்ப்பு.. எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட 11 பேருக்கு நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடைந்துள்ளது. இதற்கிடையே தான் கட்சி மேலிடத்துக்கு எதிராக எம்பி, எம்எல்ஏக்கள் பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் பசனகவுடா பட்டீல் யத்னால் எம்எல்ஏ, பிரதாப் சிம்ஹா எம்பி உள்பட 11 பேர் மீது நடவடிக்கை எடுக்க கட்சி முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இந்நிலையில் தான் தேர்தல் சமயத்திலும், அதற்கு பிறகும் சில தலைவர்கள் தொடர்ந்து கூறும் கருத்துகள் சர்ச்சையை கிளப்பி வருகின்றன.

Karnataka BJP issues notices to 11 party men including MP and MLAs for ‘anti-party activity’ and ‘causing embarrassment’

அதாவது கர்நாடகா பாஜகவில் கோஷ்டி பூசல் இருப்பதை அவர்களின் கருத்து உறுதி செய்யும் வகையில் உள்ளது. மேலும் ஒவ்வொருவரும் வெளிப்படையாக பொதுவெளியில் கட்சி தலைவர்களை குற்றம்சாட்டி வருகின்றனர். இது பாஜகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாக முன்னாள் எம்எல்ஏ ரேணுகாச்சார்யா, பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோசுக்கு எதிராக பகிரங்கமாக பேசினார். அதேபோல் சர்ச்சைக்கு பெயர் பெற்ற பசனகவுடா பட்டீல் யத்னால் உள்பட 10 நிர்வாகிகளும் கட்சிக்கு எதிராக பேசியிருந்தனர்.

இந்த நிலையில் கட்சி கட்டுப்பாட்டை மீறி கருத்துக்களை பகிரங்கமாக பேசியதாக கூறி மைசூர் குடகு எம்பி பிரதாப் சிம்ஹா, பசனகவுடா பட்டீல் யத்னால் எம்எல்ஏ, சரன்டிமத், தாசரஹள்ளி முனிராஜு, ரமேஷ் கவுடா, ஏஎஸ் பட்டீல் நடஹள்ளி, ரேணுகாச்சார்யா எம்எல்ஏ உள்பட 11 பேருக்கு பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அந்த நோட்டீசில் அவர்களின் பேச்சு குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் கேட்கப்பட்டது. இந்த நோட்டீசுக்கு தலைவர்கள் விளக்கம் அளித்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுபற்றி கர்நாடகா பாஜக மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியதாவது:

கூறுகையில், ‛‛கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தும் வகையில் பொதுவெளியில் பகிரங்கமாக கருத்து கூறிய எம்எல்ஏக்கள், எம்பி, உள்பட 11 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளோம். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் யாரும் கருத்து கூறக்கூடாது என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+