சமூக இடைவெளியை கடைபிடியுங்க.. தூய்மையாக வெச்சுக்குங்க.. பெங்களூருவாசிகளுக்கு எடியூரப்பா அட்வைஸ்
பெங்களூரு: சமூக இடைவெளியை கடைபிடித்து தூய்மையாக இருந்தால் பெங்களூருவுக்கு இன்னொரு லாக்டவுன் தேவைப்படாது என்று கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு 400க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பெங்களூருவில் பல முக்கிய இடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கூறியதாவது:
சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் தூய்மையாக வைத்துக் கொள்ளாமலும் இருந்தாலும் இதைவிட மிக மோசமாக லாக்டவுன் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் எதிர்கொள்ள நேரிடும். ஆகையால் இதை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.
பேரன் பேத்தி எடுத்தாச்சு.. இன்னுமா கேக்குது.. ஆத்திரமடைந்த மகள்.. கொன்று புதைத்த தாய்.. ஷாக்!
இது தொடர்பாகத்தான் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு எடியூரப்பா கூறினார்.