எங்களால் பெரும்பான்மையை பெற முடியவில்லை- கர்நாடகா முதல்வர் பொம்மை உருக்கம்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் எங்களால் பெரும்பான்மையை பெற முடியவில்லை என கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை உருக்கமாக தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 224 தொகுதிகளுக்கான இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதில் பாஜக 68 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 127 இடங்களிலும் ஜேடிஎஸ் 22 இடங்களிலும் மற்றவை 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகாவ்ன் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார்.அது போல் 4 தொகுதிகளில் சுயேச்சைகள் முன்னிலை வகித்து வருகிறார்கள். மலூர், கவுரிபிதனூர், அஃப்சல்புரில், ஹரப்பனஹள்ளிஆகிய 4 தொகுதிகளில் சுயேச்சைகள் முன்னிலையில் இருக்கிறார்கள்.
இதுகுறித்து பசவராஜ் பொம்மை கூறுகையில் கர்நாடகா தேர்தலில் எங்களால் பெரும்பான்மையை பெறமுடியவில்லை. தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகே தோல்விக்கான காரணங்களை ஆராய முடியும். கர்நாடக தேர்தல் முடிவுகளை பாஜகவின் முன்னேற்றத்திற்காக எடுத்துக் கொள்வோம் என தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியை பிடிக்கும் என தெரிகிறது. இதையடுத்து பாஜகவின் குதிரை பேரத்தில் சிக்காமல் இருக்க முன்னிலை வகித்து வரும் வேட்பாளர்களை ஹெலிகாப்டர் மூலம் வேறு எங்கோ பாஜக தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் வைக்க முடிவு செய்துள்ளது. பாஜக 80 ஐ எட்டிவிட்டால் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் இருந்தாலும் குதிரை பேரத்தில் ஈடுபட்டு காங்கிரஸை உடைக்கும் என்பதால் காங்கிரஸ் தங்கள் தரப்பினரை உஷார்படுத்தி வருகிறது.
அனைத்து பூத்துகள் மற்றும் தொகுதிகளில் இருந்தும் முதற்கட்ட தகவல்கள் வந்துகொண்டு இருக்கின்றன. நாங்கள் நிச்சயம் மேஜிக் நம்பரை தாண்டி அதிக இடங்களில் வெற்றி பெருவோம் என்ற நம்பிக்கை உள்ளது என பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி அதன் வேட்பாளர்களை ஒன்றாக வைத்திருப்பதற்காக ரெசார்ட்டுகளில் அறை முன்பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பொம்மை, "அவர்களின் எம்எல்ஏக்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் கட்சியால் பெரும்பான்மை பெற முடியாது. அதனால் தான் அவர்கள் பிற கட்சிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.
பாஜக தனிப்பெரும்பான்மை பெறுவது உறுதி என்பதால் எந்தக் கட்சியுடனும் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை. காங்கிரஸ் கட்சி எந்த கூட்டம் வேண்டுமானாலும் நடத்தட்டும். அதை நடத்த அவர்களுக்கு உரிமை உண்டு" என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று முன்னிலை வகித்து வருகிறது.












Click it and Unblock the Notifications