திடீரென பெங்களூரில்.. சித்தராமையா வீட்டு முன்பாக போலீஸ் குவிப்பு! என்ன காரணம்?
பெங்களூர்: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்விக்கு நடுவே பெங்களூரில் குமாரகிருபா ரோட்டில் உள்ள சித்தராமையாவின் வீட்டு முன்பு போலீசார் குவிக்கபப்ட்டுள்ளனர். திடீரென போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணியில் உள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. தனி மெஜாரிட்டிக்கு தேவயைான 113 இடங்களை விட அதிகமாக அதாவது 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் தான் முதல்வர் பதவிக்கு டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இவர்கள் 2 பேரும் முதல்வர் பதவியை விட்டு கொடுக்க விரும்பாமல் பிடிவாதம் பிடிக்கின்றனர். இவர்கள் 2 பேரையும் நேற்று மல்லிகார்ஜூன கார்கே தனித்தனியே சந்தித்து பேசினார். அதன்பிறகு இன்று ராகுல் காந்தி இருவரையும் தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளார்.
இந்நிலையில் தான் சற்று நேரத்தில் கர்நாடகாவின் அடுத்த முதல்வரின் பெயரை காங்கிரஸ் கட்சி அறிவிக்க உள்ளது. இதற்கிடையே தான் பெங்களூர் குமாரகிருபா ரோட்டில் உள்ள சித்தராமையாவின் இல்லத்தை சுற்றி இன்று திடீரென போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. கேஎஸ்ஆர்பி உள்பட கர்நாடகா போலீசார் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

திடீரென போலீசார் குவிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி விசாரித்தபோது இன்று கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கப்பட உள்ளது. முதல்வர் பதவிக்கு சித்தராமையாவின் பெயர் பைனல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மற்றவர்களின் ஆதரவாளர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தலாம் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications