Dharmasthala: சிக்கிய எலும்புகூடு.. நாட்டையை உலுக்கும் தர்மஸ்தலா புதைக்குழி வழக்கில் பெரும் திருப்பம்.. எஸ்ஐடி அதிரடி
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் நேத்ராவதி ஆற்றங்கரையோரத்தில் மாணவிகள், பெண்கள் என்று 100க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலை சுற்றிய இடங்களில் 25 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி உடல்களை தேடும் பணி நடந்து வரும் நிலையில் சிதைந்த மனித எலும்பு கூடு கிடைத்துள்ளது. இது இந்த வழக்கில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில், தட்சிண கன்னடா மாவட்டத்தில் தர்மஸ்தலா என்ற இடம் உள்ளது. இங்குள்ள மஞ்சுநாதர் கோவில் மிகவும் புகழ்பெற்றது. மூலவராக சிவன் இருக்கிறார். இந்த கோவிலுக்கு கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தான் கோவிலில் பணியாற்றிய முன்னாள் தூய்மை பணியாளர் கடந்த ஜூன் மாதம் போலீசில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார். இந்த புகார் மொத்த கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஏனென்றால் அந்த புகாரில், 1995ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 19 ஆண்டுகள் வரை கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றினேன். தர்மஸ்தலா கோவிலில் பெண்கள், மாணவிகளின் உடல்களை புதைக்க கட்டாயப்படுத்தப்பட்டேன். அவர்களின் உடல்களில் ஆசிட் தழும்புகள், காயங்கள் இருந்தன என்று கூறியிருந்தார். இந்த புகார் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இதையடுத்து கர்நாடகா அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. இந்த விசாரணை குழுவினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாஜி தூய்மை பணியாளர் கூறிய இடத்தில் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. மொத்தம் 13 இடங்களில் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.
இந்த கோவில் தர்மஸ்தலாவில் ஓடும் நேத்ராவதி நதிகரையோரம் அமைந்துள்ளது. இதனால் நேத்ராவதி கரையோரம் உடல்களை தேடும் பணியில் அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். 25 அடி ஆழம் வரை தோண்டி உடல்கள் தேடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இன்று 6வது இடத்தில் பள்ளம் தோண்டி உடல்கள் தேடப்பட்டது. அப்போது சிதைந்த மனித எலும்புகூடு கிடைத்துள்ளது.
அது ஆணின் எலும்புகூடு என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை எலும்புகூடு சிக்காத நிலையில் இப்போது கிடைத்துள்ளது. இது இந்த வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம்












Click it and Unblock the Notifications