Dharmasthala: சிக்கிய எலும்புகூடு.. நாட்டையை உலுக்கும் தர்மஸ்தலா புதைக்குழி வழக்கில் பெரும் திருப்பம்.. எஸ்ஐடி அதிரடி
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் நேத்ராவதி ஆற்றங்கரையோரத்தில் மாணவிகள், பெண்கள் என்று 100க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலை சுற்றிய இடங்களில் 25 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி உடல்களை தேடும் பணி நடந்து வரும் நிலையில் சிதைந்த மனித எலும்பு கூடு கிடைத்துள்ளது. இது இந்த வழக்கில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில், தட்சிண கன்னடா மாவட்டத்தில் தர்மஸ்தலா என்ற இடம் உள்ளது. இங்குள்ள மஞ்சுநாதர் கோவில் மிகவும் புகழ்பெற்றது. மூலவராக சிவன் இருக்கிறார். இந்த கோவிலுக்கு கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தான் கோவிலில் பணியாற்றிய முன்னாள் தூய்மை பணியாளர் கடந்த ஜூன் மாதம் போலீசில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார். இந்த புகார் மொத்த கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஏனென்றால் அந்த புகாரில், 1995ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 19 ஆண்டுகள் வரை கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றினேன். தர்மஸ்தலா கோவிலில் பெண்கள், மாணவிகளின் உடல்களை புதைக்க கட்டாயப்படுத்தப்பட்டேன். அவர்களின் உடல்களில் ஆசிட் தழும்புகள், காயங்கள் இருந்தன என்று கூறியிருந்தார். இந்த புகார் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இதையடுத்து கர்நாடகா அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. இந்த விசாரணை குழுவினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாஜி தூய்மை பணியாளர் கூறிய இடத்தில் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. மொத்தம் 13 இடங்களில் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.
இந்த கோவில் தர்மஸ்தலாவில் ஓடும் நேத்ராவதி நதிகரையோரம் அமைந்துள்ளது. இதனால் நேத்ராவதி கரையோரம் உடல்களை தேடும் பணியில் அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். 25 அடி ஆழம் வரை தோண்டி உடல்கள் தேடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இன்று 6வது இடத்தில் பள்ளம் தோண்டி உடல்கள் தேடப்பட்டது. அப்போது சிதைந்த மனித எலும்புகூடு கிடைத்துள்ளது.
அது ஆணின் எலும்புகூடு என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை எலும்புகூடு சிக்காத நிலையில் இப்போது கிடைத்துள்ளது. இது இந்த வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications