கர்நாடகா தேர்தலில் போட்டியா? இல்லையா? டிகே சிவக்குமாரின் வேட்புமனு பரிசீலனையில் செம ட்விஸ்ட்! ஆஹா
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவரது மனு நிராகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவியது. இதனால் அவரது தம்பியான காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் தான் இன்றைய வேட்புமனு பரிசீலனையில் தேர்தல் அதிகாரி ட்விஸ்ட் கொடுத்தார்.
கர்நாடகாவில் கடந்த 2018 ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. 5 ஆண்டு ஆட்சிக்காலம் மே மாதம் 24ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகா சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 10ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி உள்ளது. காங்கிரஸ் சார்பில் பல்வேறு கட்டங்களாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவக்குமார் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். இது அவரது சொந்த தொகுதியாகும். இந்த தொகுதியில் கடந்த 2008, 2013, 2018 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது 4வது வெற்றியை நோக்கி அவர் அங்கு களம் இறங்கி உள்ளார். இந்த முறை காங்கிரஸ் ஆட்சியமைந்தால் டிகே சிவக்குமார் முதல்வராக தேர்வாக வாய்ப்புள்ளது என கூறப்படும் நிலையில் அவருக்கு இது முக்கிய தேர்தலாக உள்ளது.
இந்நிலையில் தான் டிகே சிவக்குமாரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக பாஜக சார்பில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் அசோக் களமிறக்கப்பட்டுள்ளார். இதுதவிர அசோக் பெங்களூர் பத்மநாபநகர் சட்டசபை தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்நிலையில் டிகே சிவக்குமார் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று டிகே சிவக்குமாரின் தம்பியான காங்கிரஸ் எம்பி டிகே சுரேசும் திடீரென்று கனகபுரா தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இது குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் டிகே சிவக்குமார் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்பட பல்வேறு விசாரணை அமைப்புகளிடம் 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் சில வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. இதனால் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்படலாம். இதனால் தான் டிகே சுரேஷ் மனுத்தாக்கல் செய்தததாக தகவல்கள் வெளியாகின.
மேலும் இன்று காலையில் வேட்புமனு மீதான பரிசீலனை தொடங்கியது. டிகே சிவக்குமாரின் வேட்புமனுத்தாக்கல் தள்ளுபடி செய்யப்படலாம் என்றதால் அவரது ஆதரவாளர்கள் கலக்கமடைந்து இருந்தனர். இறுதியில் டிகே சிவக்குமாரின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை தேர்தல் அதிகாரி முறைப்படி அறிவித்தார். இதனால் அவரும், அவரது ஆதரவாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன்மூலம் டிகே சிவக்குமார் கனகபுரா தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகி .உள்ளது. இதனால் டிகே சுரேஷ் தனது மனுவை வாபஸ் பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications