38 ஆண்டு கால வரலாற்றை மாற்றும் பாஜக.. காங்கிரசுக்கு ஷாக்.. நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பு
பெங்களூர்: 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்று நியூஸ் நேஷனின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கிறது.
224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. மக்கள் விறு விறுப்பாக ஆர்வமுடன் வாக்களித்தனர். கர்நாடகவை பொறுத்தவரை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க அங்கு 113 தொகுதிகளை வென்றாக வேண்டும்.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானாவை கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் என்றே கூறியிருந்தன. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. நியூஸ் நேஷன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, பாஜக 114 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி 86 இடங்களிலும், ஜேடிஎஸ் 21 இடங்களில் வெற்றி பெறுகிறது. ஆட்சி அமைக்க 113 இடங்களில் வென்றால் போதும் என்ற நிலையில், பாஜக 114 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்கிறது நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பு.
இதன் மூலம் கர்நாடகாவில் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்காது என்ற 38 ஆண்டு கால வரலாற்றை பாஜக மாற்றும் என்பது நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பு முடிவு. கர்நாடகாவை பொறுத்தவரை கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் ஆளும் கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. 38 ஆண்டுகளாக ஆட்சி மாறி மாறி அமைந்து வருகிறது.












Click it and Unblock the Notifications