3 மணிநேரம்.. 26 கிமீ.. பெங்களூர் பேரணியில் அசராத பிரதமர் மோடி! பிரமித்த மக்கள்!அரண்ட காங்கிரஸ்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்த பிரசார வாகனத்தில் பெங்களூரில் 26 கிலோமீட்டருக்கு 3 மணிநேரம் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தார். வழிநெடுகிலும் கூடியிருந்த திரளான தொண்டர்கள் ‛மோடி.. மோடி..' கோஷத்துடன் மலர்தூவி அவரை வரவேற்றது பாஜகவினரை உற்சாகப்படுத்திய நிலையில் காங்கிரஸ் கட்சியினர் அரண்டுபோய் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று முதல் நாளை வரை 3 நாள் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவில் முகாமிட்டு வாக்கு சேகரிக்கிறார்.

இன்று 2வது நாள் பிரசாரத்தை பிரதமர் மோடி பெங்களூரில் துவங்கினார். பெங்களூரில் மட்டும் 28 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் இன்றும், நாளையும் பிரதமர் மோடி பேரணியாக செல்வதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை பாஜக கட்சியினர் செய்தனர்.
அதன்படி இன்று பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் பிரமாண்ட ஊர்வலத்தை தொடங்கினார். பெங்களூர் ஆர்பிஐ மைதானத்தில் இருந்து பிரதமர் மோடியின் பிரமாண்ட பேரணி தொடங்கியது. காவி நிறத்திலான பிரசார கார் பிரதமர் மோடிக்காக வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த காரில் பிரதமர் மோடி ஏறி நின்று ஊர்வலமாக சென்றார்.
அப்போது சாலையின் இருபுறமும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று ‛மோடி.. மோடி..' என கோஷமிட்டனர். மேலும் பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் அவர் மீது பூக்கள் தூவப்பட்டன. இதனால் பிரதமர் மோடி உற்சாகமடைந்தார். இந்த பேரணி காலை 10 மணிக்கு துவங்கிய நிலையில் தொடர்ந்து மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி அசராமல் திறந்த வாகனத்தில் நின்றபடி பேரணியாக சென்றார்.
பிரதமர் மோடியின் இந்த பேரணியையொட்டி மொத்தம் 35 ரோடுகளில் பயணிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என பெங்களூர் மாநகர போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். மேலும் அடுத்ததாக பெங்களூரில் பிரதமர் மோடி விடுபட்ட பகுதிகளில் 2 நாள் பேரணி நடத்த உள்ளார். இன்று மொத்தம் 26 கிலோமீட்டர் பிரதமர் மோடி பேரணி சென்ற நிலையில் நாளை 10 கிலோமீட்டருக்கு பெங்களூரில் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக செல்ல உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேரணியால் காங்கிரஸ் கட்சி அரண்டு போய் உள்ளது. ஏனென்றால் கடந்த 2018 தேர்தலின்போது முதலில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான சூழல் தான் கர்நாடகாவில் நிலவியது. மேலும் 2013-2018 வரையிலான காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு மீது பெரிய அளவில் எந்த புகாரும் இல்லாத நிலையில் இருந்தது.
ஆனால் இறுதிக்கட்டத்தில் பிரதமர் மோடியின் பிரசாரம் பாஜகவுக்கு கைக்கொடுத்து காங்கிரஸ் கட்சியை வீழ்ச்சியடைய செய்தது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி அந்த யுக்தியை கையில் எடுத்துள்ளார். இதனால் தான் காங்கிரஸ் கட்சி கலக்கமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
-
Annamalai: தமிழக சட்டசபை தேர்தல்.. ஒரு வழியாக பாஜகவின் "அந்த" பட்டியலில் இடம்பெற்ற அண்ணாமலை பெயர்! -
எச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி? சென்னையில் உறுதி கொடுத்த பிரதமர் மோடி.. பாஜக மேலிடம் எடுத்த முடிவு! -
“விஜய் பிரிக்கப்போவது எல்லாம் திருமாவளவன் கட்சி வாக்குகளைத்தான்.. NDAவுக்கு பாதிப்பில்லை” - எச்.ராஜா -
நம்மதான் ஜெயிக்கிறோம்.. கோவையில் செந்தில் பாலாஜி மாஸ் திட்டம்.. கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை -
தேர்தல் பரப்புரையில்.. துரந்தர், கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றி பேசிய மோடி! கேரளாவில் சலசலப்பு -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
Sellur Raju: பாஜகவுடன்தானே? பாகிஸ்தானுடனா கூட்டணி வைத்தோம்? ஆவேசமான செல்லூர் ராஜு! -
விஜய் மனதில் பாஜக இருக்கிறது.. அடித்து சொல்லும் குஷ்பூ.. காரணம் தெரியுமா? -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா












Click it and Unblock the Notifications