அடேங்கப்பா! 115% உயர்ந்த பாஜக அமைச்சர் அசோக்கின் சொத்து மதிப்பு.. யாரை எதிர்த்து போட்டி தெரியுமா?
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் பாஜக அரசின் வருவாய்த்துறை அமைச்சராக இருக்கும் அசோக்கின் சொத்து மதிப்பு 115 சதவீதம் உயர்ந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அவரது பொறுப்புகள் 2.49 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.9.56 கோடியாக அதிகரித்துள்ளது.
224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இங்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 113- இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும்.
மே 13ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் தீவிரம் அடைந்துள்ளது.

பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் உள்பட அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பு மனுவுடன் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப்பத்திரமும் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி வேட்பாளர்கள் தங்களது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில், கர்நாடகாவில் செல்வாக்கு மிக்க பாஜக தலைவர்களில் ஒருவராக விளங்கும் அசோக்கின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன.
அசோக்கின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் மட்டும் 115 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. அசோக்கிற்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக ரூ.3.73 கோடி அசையும் சொத்துக்கள் இருப்பதாக கூறியிருந்தார். ஆனால், தற்போது அவரது அசையும் சொத்துக்களின் மதிப்பு 12.31 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் அவரது மனைவி வாங்கிய 12 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகளும் அடங்கும்.
அசோக்கின் பொறுப்புகளும் 282 சதவீதம் உயர்ந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அவரது பொறுப்புகள் 2.49 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.9.56 கோடியாக அதிகரித்துள்ளது. அசோக் குடும்பத்தினரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.87.35 கோடியாகும். 2018 ஆம் ஆண்டு ரூ.40.62 கோடியாக இருந்தது.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக இருக்கும் அசோக் பத்மநாபநகர் தொகுதியில் 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார். தற்போது 4-வது முறையாக இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இது தவிர கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாருக்கு எதிராகவும் கனகபுரா வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications