Zee News Exit poll: கர்நாடகாவில் வொர்க் அவுட்டாகிறதா ராகுல் மேஜிக்? சித்தராமையா முதல்வராகிறாரா?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபை அல்லது காங்கிரஸ் கட்சி ஆட்சியை அமைக்கும் என ஜி நியூஸ் மேட்ரிஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகா சட்டசபை தேர்தல் இன்றைய தினம் நடந்து முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இந்த தேர்தலில் 65.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளனர்.

மொத்தம் 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டசபை தேர்தலில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. இத்தனை இடங்களை எந்த கட்சி பெறுகிறதோ அந்த கட்சி பெரும்பான்மை பெற்றது என்று அர்த்தம். அந்த வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு எந்த கட்சிக்கு பெரும்பான்மை இல்லை.
இந்த நிலையில் பாஜக மற்ற கட்சிகளை வளைத்து கூட்டணி ஆட்சி அமைத்துவிடும் என்பதால் காங்கிரஸ் கட்சி ஜேடிஎஸ்ஸை விட அதிக இடங்களில் வென்றாலும் குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தது. ஆனால் அவருடைய ஆட்சியில் ஓராண்டுக்கு பிறகு காங்கிரஸ் , ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்ததால் குமாரசாமி பெரும்பான்மையை இழந்தார்.
Recommended Video
இதையடுத்து கர்நாடகா சட்டசபையில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். இதில் தோல்வியுற்றார். பிறகு பாஜக ஆட்சி அமைக்க கோரியது. பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றார். இதையடுத்து அவரது தலைமையின் கீழ் ஆட்சி தொடர்ந்தது. ஆனால் பாஜகவில் 70 வயதுக்கு மேல் இருப்போர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடாது என்ற ஒரு விதி இருப்பதால் எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.
இதையடுத்து பசவராஜ் பொம்மை தலைமையில் ஆட்சி அமைந்தது. இன்று நடந்த தேர்தலில் பாஜக, காஙகிரஸ், ஜேடிஎஸ் ஆகிய கட்சியிடையே போட்டி இருந்தது. பாஜக ஆட்சியை தக்க வைத்து கொள்ள போராடியது. 38 ஆண்டுகளாக கர்நாடகாவில் எந்த கட்சியும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டதில்லை. அதை முறியடித்து பாஜக போராடியது. அது போல் இந்த முறை எப்படியாவது பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என காங்கிரஸ் தீவிரம்காட்டியது.

இதனிடையே நான் கிங் மேக்கர் இல்லை, கிங் என ஜேடிஎஸ்ஸின் குமாரசாமி கூறி வந்தார். தற்போது தேர்தல் முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அதில் ஜி நியூஸ் மேட்ரீஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி 103 முதல் 118 இடங்கள் வரை வெல்லும். பாஜக 79 முதல் 94 இடங்கள் வரை வெல்லும். அது போல் ஜேடிஎஸ் 25 முதல் 33 இடங்கள் வரை வெல்லும் என கணித்துள்ளது.
இந்த கருத்துக் கணிப்பின் படி கர்நாடகா சட்டசபையில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் காங்கிரஸ் கட்சி ஜேடிஎஸ்ஸுடன் கூட்டணி அமைத்து முதல்வர் பதவியை அவருக்கு விட்டுக் கொடுத்துவிடும். ஒரு வேளை காங்கிரஸ் கட்சி 113 இடங்களை வென்றால் தனித்து ஆட்சி அமைக்கும். வாக்கு பதிவு வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. அன்றைய தினம் எந்த கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது என்பதை பார்ப்போம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications