நினைவெல்லாம் சங்கீதா.. பின்னாலயே விரட்டி விரட்டி வந்த நிழல்.. அதுக்குன்னு இப்படியா? கலங்கிய கர்நாடகா
பெங்களூர்: சங்கீதா எங்கே போனாலும், பின்னாடியே இவரும் கிளம்பி போயிடுவாராம்.. அந்த அளவுக்கு ஒருதலைக்காதல் மோகம் தலைக்கேறி விட்டது. என்ன நடந்தது கர்நாடகாவில்?
கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம், பேலூர் தாலுகாவில் உள்ளது நிடுகுடு என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்த பெண் சங்கீதா.. 21 வயதாகிறது.. பி.காம் படித்திருக்கிறார்.. அதற்கு பிறகு மேற்படிப்பு எதுவும் படிக்கவ்லலை.. வீட்டில்தான் இருந்துள்ளார் சங்கீதா.

தலைக்கேறிய காதல்: இதே கிராமத்தை சேர்ந்தவர் சிவா.. சங்கீதாவை நீண்ட காலமாகவே ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.. முதன்முதலில் தன்னுடைய காதலை, சங்கீதாவிடம் சொன்னபோதே, அதை சங்கீதா ஏற்கவில்லை.. மறுப்பு சொல்லிவிட்டார்.
ஆனாலும், சிவா கேட்கவில்லை.. சங்கீதா மீது உயிரையே வைத்திருந்ததால், அவர் எங்கே போனாலும், பின்னாடியே ஃபாலோ செய்து கொண்டு போவாராம்.. பிறகு, தன்னை தயவுசெய்து காதலிக்கும்படி தொந்தரவும் செய்வாராம். தன்னால் காதலிக்க முடியாது என்று பலமுறை சங்கீதா சொல்லியும், கேட்கவில்லை.. காதல் டார்ச்சரை தொடர்ந்து கல்யாண டார்ச்சரை ஆரம்பித்துள்ளார் சிவா.. தன்னை மட்டமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் தொல்லை செய்து வந்திருக்கிறார்.
டார்ச்சர்: இப்படிப்பட்ட சூழலில்தான், பேலூரில் உள்ள அய்யப்பஸ்வா கோயிலுக்கு சங்கீதா குடும்பத்துடன் சென்றிருந்தார்.. வழக்கம்போல் சிவாவும், அதே கோயிலுக்கு கிளம்பினார்.. வழக்கம்போல, சங்கீதாவிடம் சென்று டார்ச்சரை ஆரம்பித்தார்..
"எதுக்காக நான் போன் செய்தால், போனை எடுக்க மாட்டேங்குறே" என்று சரமாரியாக திட்ட ஆரம்பித்தார்.. "என்னை நீ லவ் பண்ணாவிட்டால், கொலையே செய்துடுவேன்" என்றும் சங்கீதாவை மிரட்டியிருக்கிறார். நாளுக்கு நாள் சிவாவின் டார்ச்சரால் நொந்துபோயிருந்த சங்கீதா, நேற்று கோயிலுக்கும் வந்து கொலை மிரட்டல் விடுக்கவும், மிகவும் கவலையடைந்தார்.. மிகுந்த மன உளைச்சலும் அடைந்தார்.
அலறிய பெற்றோர்: ஒருவேளை, தன்னால் தன்னுடைய குடும்பத்திற்கும் கெட்டப்பெயர் வந்து விடுமோ என்று பயந்தே போனார்.. நேற்றைய தினம், வீட்டில் யாருமில்லாததால், தற்கொலை செய்து கொண்டார் சங்கீதா.. சங்கீதாவின் பெற்றோர் கடைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தபோது, மகளின் சடலம் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறினார்கள்..
தகவலறிந்து வந்த பேலூர் போலீசார் சங்கீதாவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. பிறகு, வழக்குப்பதிவு செய்து டார்ச்சர் சிவாவையும் கைது செய்தனர்.
"உங்கள் மகளை எனக்கே திருமணம் செய்து வைத்துவிடுங்கள்" என்று சங்கீதாவின் பெற்றோரிடமே நேரடியாகவே பெண் கேட்டு சென்றாராம் சிவா. ஆனால், வெறும் 21 வயதுதான் தற்போது நடப்பதால், மகளுக்கு கல்யாணம் செய்து வைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள்..
அவமானம்: அதற்கு பிறகும் சங்கீதாவை விடாமல் விரட்டியிருக்கிறார் சிவா. பொது இடங்கள் என்றும் பார்க்காமல், பின்னாடியே வந்து டார்ச்சர் தந்ததால், அவமானம் தாங்காமல் பல நாட்கள் கதறி அழுதாராம் சங்கீதா.. இறுதியில் மொத்தமாக தன் மூச்சை நிறுத்திக் கொண்டார்.. அளவுக்கு மீறினால், அன்புகூட ஆபத்துதான் போலும்..!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications