கர்நாடகாவில் கருணைக் கொலை செய்ய அனுமதி! யாருக்கெல்லாம் இது பொருந்தும்?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: எந்த சிகிச்சை அளித்தாலும் குணப்படுத்த முடியாத தீராத நோய் உள்ளவர்கள் கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமையை கொடுக்க கர்நாடகாவில் கருணைக் கொலைக்கு அந்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தீராத நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் குணமடையாமல் தவிக்கும் நிலையில் இருக்கும் நோயாளி கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமையை இந்த வாய்ப்பு வழங்குகிறது.

karnataka mercy killing

கருணைக் கொலையை அனுமதிப்பதா என்பதை தீர்மானிக்க மூன்று மருத்துவர்களைக் கொண்ட இரு குழு அமைக்கப்படும். நோயாளி கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமை குறித்து மாவட்ட அளவில் நிபுணர்கள் அடங்கிய மருத்துவர்கள் குழு அமைக்கப்படும்.

சிகிச்சை அளித்தாலும் நோயாளி உயிர் பிழைக்கப் போவதில்லை என்பதை உறுதி செய்த பிறகு நோயாளியை கண்ணியமாக இறக்க அனுமதிக்கும் முடிவை இந்தக் குழு எடுக்கும்.

இந்த குழுவினர் நோயாளியின் உடல்நிலையை நன்கு பரிசோதனை செய்து அவர்களுக்கு சிகிச்சை அளித்தாலும் பிழைக்க வைக்க முடியாது என உறுதியளிக்கும்பட்சத்தில் இது தொடர்பாக அறிக்கை தயாரித்து இரண்டாம் நிலை மருத்துவக் குழுவிடம் கொடுத்து அந்த குழு அறிக்கையை ஆராய்ந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்.

நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன் நோயாளி கருணைக் கொலை செய்யப்படுவார். அரசின் இந்த உத்தரவு கோமாவில் இருப்பவர்களுக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு கருணைக் கொலை தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முந்தைய உத்தரவில் சில மாற்றங்கள் செய்து இதற்கான விதிமுறைகளை எளிதாக்கியது. சட்டப்பிரிவு 21 ஐ அடிப்படையாக வைத்தே கருணைக் கொலைக்கு கர்நாடக அரசின் சுகாதாரத் துறை நேற்று அனுமதி அளித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+