ராகுல் காந்திக்கு அதிர்ச்சி கொடுத்த கர்நாடக மக்கள்.. காங்கிரஸ் அரசு நடத்திய சர்வேயில் பயங்கர ஷாக்
பெங்களூர்: வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இதனால் ஒரு தரப்பினர் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்தவும் வலியுறுத்துகிறார்கள். இந்தச் சூழலில் கர்நாடகாவில் நடத்தப்பட்ட ஆய்வில் மக்கள் அதற்கு நேர்மாறான கருத்துகளைக் கூறியுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது மக்கள் நம்பிக்கை அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாகவே வாக்குப்பதிவு இயந்திரங்களிலேயே தேர்தல் நடத்தப்படுகிறது. இதன் மூலம் செலவும், நேரமும் பல மடங்கு மிச்சமாகிறது. அதேநேரம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடப்பதாக எதிர்க்கட்சிகளில் தொடர்ந்து சாடி வருகிறார்கள். மேலும், ஒரு தரப்பினர் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள்
இந்தச் சூழலில் சித்தராமையா தலைமையிலான கர்நாடகக் காங்கிரஸ் அரசு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்வேயை நடத்தியது. அதில் பொதுமக்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அதிகளவில் நம்பிக்கை வைத்துள்ளது தெரியவந்துள்ளது. ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து கூறி வந்தாலும், மக்கள் அதை ஏற்கவில்லை என்பதையே இந்த சர்வே காட்டுகிறது.
காங்கிரஸ் சர்வே
கர்நாடகாவில் பெங்களூர், பெலகாவி, கலபுரகி, மைசூர் என 102 சட்டசபைத் தொகுதிகளில் 5,100 பேரிடம் இந்த சர்வே எடுக்கப்பட்டது. கர்நாடக அரசின் தலைமைத் தேர்தல் அதிகாரி வி. அன்பு குமார் இந்த சர்வேயை மேற்பார்வையிட்டார்.இந்த சர்வேயில் 83.61% பேர் தாங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்புவதாகக் கூறியுள்ளனர். மேலும், 69.39% பேர் வாக்குப்பதிவு இயந்திரங்களைத் துல்லியமான முடிவுகளை வழங்குகின்றன என்பதை ஏற்றுக் கொண்டனர். அதிலும் 14.22% பேர் வாக்குப்பதிவு இயந்திரங்களை முழுமையாக ஏற்றுக் கொண்டனர்.
விரிவான சர்வே
டிவிஷன் வாரியாக பார்க்கும்போது கலபுரகியில் வசிக்கும் மக்களே வாக்குப்பதிவு இயந்திரங்களில் அதிகபட்ச நம்பிக்கை காட்டியுள்ளனர். அங்கு 83.24% பேர் வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்புகிறார்கள். அதிலும் குறிப்பாக 11.24% பேர் அதை முழுமையாக ஒப்புக்கொண்டனர். அடுத்ததாக மைசூரில் 70.67% பேர் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்பதாகச் சொல்லியுள்ளனர். அதிலும் 17.92% பேர் உறுதியாக ஏற்றுக் கொண்டனர். பெலகாவியில் 63.90% பேர் ஏற்றுக் கொண்டனர்.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் தான் குறைந்தபட்ச அளவில் இது இருக்கிறது. அங்கு 63% பேர் வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பும் நிலையில், வெறும் 9.28% பேர் மட்டுமே அதை முழுமையாக நம்புவதாகத் தெரிவித்தனர்.
பாயும் பாஜக
இதற்கிடையே இந்த சர்வே முடிவுகளை வைத்து ராகுல் காந்தியை பாஜக விமர்சித்துள்ளது. இது குறித்து பாஜக கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக் ட்விட்டர் பக்கத்தில், "பல ஆண்டுகளாக, ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஒரே கதையைச் சொல்லி வருகிறார்: இந்தியாவின் ஜனநாயகம் 'அபாயத்தில்' உள்ளது, EVMகள் 'நம்பத்தகாதவை', நமது அரசு அமைப்புகளை நம்ப முடியாது எனத் திரும்பத் திரும்ப சொல்கிறார். ஆனால், கர்நாடக மக்களின் சர்வே அதற்கு நேர்மாறாகவே இருக்கிறது. மக்கள் EVMகளை முழுமையாக நம்புவதையே இது காட்டுகிறது
இந்தளவுக்கு மக்கள் தெளிவாக வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்புகிறது. ஆனால், முதல்வர் சித்தராமையா அரசு கர்நாடகாவில் வாக்குச்சீட்டு முறையில் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்துள்ளது. கர்நாடகாவைப் பின்னோக்கி எடுத்துச் செல்ல சித்தராமையா அரசு முடிவு செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி தோல்வி அடையும்போது மட்டுமே இது பற்றி எல்லாம் பேசுகிறது. அதேநேரம் காங்கிரஸ் வெல்லும்போது இவை சரியானதாக மாறிவிடுகிறது.. இது கொள்கை அரசியல் அல்ல. சந்தர்ப்பவாத அரசியல்" என்று சாடினார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications