வீட்டை காலி செய்ய சொன்னால் அவ்வளவுதான்.. தினமும் அறிக்கை வேண்டும்.. கர்நாடக அரசு அதிரடி உத்தரவு
பெங்களூர்: கொரோனா வைரஸ் பரவிவிடும் என்பதற்காக வீட்டைவிட்டு காலி செய்யச் சொல்லும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பேயிங் கெஸ்ட் எனப்படும் பிஜி ஹாஸ்டலில் தங்கி உள்ளவர்களை வெளியேறுமாறு உரிமையாளர்கள் கெடுபிடி காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதேபோல, டாக்டர்கள், நர்சுகள் போன்றோரை வீட்டிலிருந்து வெளியேற வீட்டின் உரிமையாளர்கள் கட்டாயப் படுத்துகிறார்கள் என்று குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. அவர்கள் மூலமாக தங்கள் குடும்பத்தினருக்கு நோய் பரவி விடக்கூடாது என்று அச்சப்பட்டு இவ்வாறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
இது பற்றி கர்நாடக அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், டாக்டர்கள், மருத்துவ துறை ஊழியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளிட்டோரை வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர்கள் மிரட்டுவதாக அதிக புகார்கள் வருகின்றன. இதுபோன்ற நடவடிக்கை, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுக்கும் குற்றத்திற்கு இணையானது. எனவே, அனைத்து மாவட்ட கலெக்டர்கள், பெங்களூர் மாநகராட்சி கமிஷனர், இணை கமிஷனர், நகராட்சிகளின் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் துணை கமிஷனர்கள் ஆகியோர் இதுபோன்ற புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்படுகிறது.

உரிய சட்டத்தின்கீழ், வீட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு தினமும் அறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜாவித் அக்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications