ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய சித்தராமையா.. முடா வழக்கில் சிபிஐ விசாரணைக்கு 'நோ' சொன்னது உயர்நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: முடா எனப்படும் மைசூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் (MUDA), சித்தராமையா குடும்பத்திற்கு சட்டவிரோதமாக நிலத்தை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

தகவல் அறியும் உரிமை சட்ட(RTI) ஆர்வலர் சினேகமாயி கிருஷ்ணா என்பவர் சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கை நீதிபதி எம். நாகபிரசன்னா தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. ஜன.27ம் தேதி வழக்கு விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று நீதிபதி எம். நாகபிரசன்னா தீர்ப்பை வாசித்தார்.

high court karnataka siddaramaiah

அதில், “நோய்வாய்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் அருமருந்தாக சிபிஐ விசாரணையை கருத கூடாது. லோக் ஆயுக்தா காவல்துறையினர் விசாரணை சுதந்திரமானதாக இருக்கிறது. வழக்கின் விசாரணை ஆவணங்களை பார்க்கும்போது, அது தவறான பாதையில் செல்வதாகவோ, அல்லது வெறுமென பெயருக்கு மட்டும் நடத்தப்பட்ட தரமற்ற விசாரணையாகவோ தெரியவில்லை. எனவே சிபிஐ விசாரணை தேவையில்லை” என்று மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+