மாதம் ஒருநாள் சம்பளத்துடன் மாதவிடாய் விடுமுறைக்கு இடைக்கால தடை - கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடி
பெங்களூர்: கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் 18 வயது முதல் 52 வயது வரையிலான அரசு - தனியார் பெண் பணியாளர்களுக்கான மாதம் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா செயல்பட்டு வருகிறார். கர்நாடகாவில் தொழில்துறை அமைச்சராக சந்தோஷ் லாட் உள்ளார். இந்நிலையில் தான் கர்நாடகாவில் நீண்டகாலமாக அரசு மற்றும் தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் மாதவிடாய் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை கர்நாடகா அரசு பரிசீலனை செய்தது.

இதையடுத்து பேராசிரியை சப்னா கிறிஸ்ட் தலைமையில் 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மாதம் ஒருமுறை என்று மொத்தம் 12 நாட்கள் அரசு, தனியார் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை கர்நாடகா அரசு ஏற்றது.
இதையடுத்து கடந்த நவம்பர் 20ம் தேதி கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்தது. 1948 தொழிற்சாலை சட்டம், 1961 கர்நாடகா கடகைள் மற்றுமு் வணிக நிறுவன சட்டம், 1951ம் ஆண்டுக்கான தோட்ட தொழிலாளர் சட்டம், 1966ம் ஆண்டுக்கான பீடி தொழிலாளர் (வேலைவாய்ப்பு சட்டம்), 1961ம் ஆண்டு மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் இயங்குவோர் பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இது அரசு ஊழியர்களுக்கு பொருந்தாமல் இருந்தது. பிறகு பெங்களூர் ஹோட்டல்கள் சங்கம் சார்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு பெண் ஊழியர்களுக்கும் இந்த விடுப்பு பொருந்தும் என்று உத்தரவிட்டது. அதன்பிறகு வழக்கை டிசம்பர் 9 ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதன்படி 18 வயது முதல் 52 வயது நிரம்பிய பெண் ஊழியர்கள் மாதம் ஒருமுறை மாதவிடாய் விடுமுறையை எடுத்து கொள்ளலாம். இதற்கு எந்த மருத்துவ ஆவணங்களையும் காண்பிக்க வேண்டியது இல்லை. இந்த விடுமுறையை எடுக்கும்போதும் சம்பளம் பிடிக்கப்படாது. அதேபோல் ஒருமாதத்தில் விடுமுறை எடுக்காவிட்டால் அதனை இன்னொரு மாதத்தில் சேர்த்து எடுக்க முடியாது நிரந்தரம், ஒப்பந்தம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பணியில் உள்ள ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் மாதவிடாய் விடுப்பு தொடர்பாக பெங்களூர் ஹோட்டல்கள் சங்கம் மற்றும் Avirata AFL கனெக்ட்டிவிட்டி சிஸ்டம்ஸ் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்த மனுவை இன்று நீதிபதி எம் ஜோதி விசாரித்தார். அப்போது கர்நாடகா அரசின் மாதவிடாய் விடுப்பு தொடர்பான உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இதனால் கர்நாடகாவில் தொழிற்சாலை உள்பட அனைத்து துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு தொடர்பான அரசின் உத்தரவை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மனுதாரர்கள் தரப்பில், ‛‛மாதவிடாய் விடுப்பு வழங்க நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட சட்டத்தில் எந்த இடமும் இல்லை. இதனால் அரசு திடீரென்று ஒரு அறிவிப்பின் மூலமாக சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பை மாதம் ஒருமுறை பெண்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிடுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை.
அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாக கர்நாடகா அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், தொழில்அமைப்புகளிடம் கலந்தாலோசிக்கவில்லை'' என்று கூறப்பட்டு இருந்தது. இதனை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில் கர்நாடகா அரசு பிறப்பித்த மாதம் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய பெண் ஊழியர்களின் மாதவிடாய் விடுமுறைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் அரசு தனது தரப்பு வாதத்தை அறிக்கையைாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications