ரூ.1 கோடி.. அந்தரங்க போட்டோக்களால் ஐபிஎஸ் ரூபாவுக்கு சிக்கல்? ஐஏஎஸ் ரோகினி அடுத்த மூவ் - அதிரடி
பெங்களூர்: கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரிக்கும், ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கும் இடையே கடும் மோதல் உள்ளது. ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரியின் அந்தரங்க போட்டோக்களை ஐபிஎஸ் அதிகாரி ரூபா தனது பேஸ்புக்கில் பகிர்ந்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்ததே இதற்கு காரணம். இருவரின் மோதல்கள் கர்நாடகாவை அதிர செய்துள்ள நிலையில் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு ரோகினி சிந்தூரி, ரூபாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் பிரச்சனை இன்னும் விஸ்வரூபமாகி உள்ளது. மேலும் ரோகினி சிந்தூரியின் இந்த செயல்பாடு ரூபாவை கடும் கோபமடைய செய்துள்ளது.
கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக ரோகினி சிந்தூரியும், ஐபிஎஸ் அதிகாரியாக சசிகலா புகழ் ரூபாவும் உள்ளனர். ரோகினி சிந்தூரி கர்நாடக இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராகவும், ரூபா கர்நாடக கைவினை பொருட்கள் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றினர்.
இந்நிலையில் தான் ரூபா, ரோகினி சிந்தூரிக்கு இடையே கடும் மோதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மோதலுக்கு பிள்ளையார் சுழி போட்டது ரூபா தான்.

அந்தரங்க போட்டோக்கள்
அதாவது ரோகினி சிந்தூரியின் தனது தனிப்பட்ட (அந்தரங்கம்) படங்களை 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பியதாக கூறி 7 போட்டோக்களை ரூபா தனது பேஸ்புக்கில் பதிவிட்டார். மேலும் மைசூரில் பணியாற்றியபோது ரோகினி சிந்தூரிக்கும், அங்குள்ள எம்எல்ஏ சாரா மகேசுக்கும் இடையே மோதல் இருந்த நிலையில் இருவரும் உணவகத்தில் சந்தித்து பேசும் போட்டோவையும் ரூபா வெளியிட்டு இருந்தார். மேலும் ரோகினி சிந்தூரி மீது ஏராளமான ஊழல், முறைகேடு புகார் இருந்தும் இன்னும் விசாரிக்கப்படவில்லை எனக்கூறி 20 கேள்விகள் கேட்டிருந்தார்.

பொறுப்புகள் பறிப்பு
இதற்கு ரோகினி சிந்தூரி கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். ரூபா ஒரு மன நலம் பாதித்தவர். தன்னை பற்றி அவதூறு பரப்பும் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை, 2 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார். மேலும் இருவரும் வகித்த வந்த பொறுப்புகளும் பறிக்கப்பட்டு அவர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் வழக்கு
மேலும் இதுதொடர்பாக ரோகிணி சிந்தூரி, ரூபா ஆகிய 2 பேரும் பெங்களூரில் உள்ள விதான சவுதாவில் தலைமை செயலாளர் வந்திதா சர்மாவை தனித்தனியே சந்தித்து புகார்கள் அளித்தனர். இதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் குறித்து பொதுவெளியில் இருவரும் கருத்து தெரிவிக்க கூடாது என வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது.

ரூ.1 கோடி கேட்டு நோட்டீஸ்
இது ஒருபுறம் இருக்க தற்போது ரோகினி சிந்தூரி, ரூபாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ‛‛எழுத்துப்பூர்வமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இந்த மன்னிப்பை சமூக வலைதளங்களில் பகிர வேண்டும். அதோடு என்னை பற்றிய அவதூறான பதிவுகளை உடனே வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும். மேலும் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியது, மனவேதனை அளித்தது ஆகியவற்றுக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். இதை செய்யவிட்டால் நீதிமன்றத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு
முன்னதாக, தன்னை பற்றி அவதூறு பரப்புவதாக கூறி ரோகினி சிந்தூரி பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ரூபாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். சமூகவலைதளங்களில் தன்னை பற்றி கருத்து வெளியிட ரூபாவுக்கு தடை விதிக்க வேண்டும் என பெங்களூர் 74 ஆவது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ரோகினி சிந்தூரி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications