ஓடுங்க கூர்க் பக்கம்.. கர்நாடகாவில் மீண்டும் ஆரம்பித்த ரிசார்ட் அரசியல்
Recommended Video
பெங்களூர்: ஆபரேஷன் தாமரை திட்டத்தை பாஜக கையில் எடுத்துள்ளதாக சந்தேகிக்கும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைமை, தங்கள் எம்எல்ஏக்களை குடகு மாவட்டத்தில் உள்ள ரிசார்ட்டுக்கு அனுப்பி வைக்கிறது.
ஏற்கனவே இந்த கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், ராஜினாமா எண்ணிக்கை அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக எம்எல்ஏக்களை குடகு மாவட்டத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்கவைக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.

முதல்வர் குமாரசாமி தவிர்த்து பிற அனைத்து மத சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களும் குடகு மாவட்டம் சோம்வார்பேட்டையிலுள்ள, ரிசார்ட்டுக்கு இன்று இரவு கிளம்ப உள்ளனர்.
ஏற்கனவே அங்கு 35 அறைகள் புக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர், குமாரசாமியை தவிர்த்துவிட்டு, அந்த கட்சியின் எஞ்சிய 33 எம்எல்ஏக்கள் அங்கு செல்ல உள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின்போது, மொத்தம் 37 தொகுதிகளை மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி வென்றது. காங்கிரஸ் கட்சி 79 தொகுதிகளை பெற்றது.
இப்போது மதசார்பற்ற ஜனதா தளத்தின் 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டதால் மற்றவர்கள் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட உள்ளனர். இதன் மூலமாக கர்நாடகாவில் மீண்டும் ரிசார்ட் அரசியல் ஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications