கர்நாடகாவில் நிலச்சரிவு! இடுப்புக்கு கீழ் இருக்கும் ஆண் சடலம் யாருடையது? டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா மாநிலம், பெங்களூரில் உள்ள நிலச்சரிவில் சிக்கிய விபத்தில் இடுப்புக்கு கீழ் பாகம் மட்டும் கிடைத்த நிலையில் அது டிஎன்ஏ பரிசோதனை மூலம் யாருடையது என்ற தகவல்கள் உறுதியானது. இந்த கோரச் சம்பவத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. அதில் 3 பேர் தமிழர்கள் ஆவார்கள்.

வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் கர்நாடகா மாநிலம் ஷிரூர் அருகே கடந்த ஜூலை 16 ஆம் தேதி அதாவது 10 நாட்களுக்கு முன் கங்கவள்ளி ஆற்றின் கரையோரம் நிலச்சரிவு ஏற்பட்டது.

karnataka landslide rain

அந்த நிலச்சரிவில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி இழுத்து செல்லப்பட்டது. அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வந்த தம்பதி, அவர்களுடைய குழந்தைகள், தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுநர், நடத்துநர், மற்றும் கேரளா கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் அர்ஜுன் ஆகிய 7 பேர் இந்த நிலச்சரிவில் சிக்கினர்.

இதில் சிக்கிய 6 பேரின் உடல்களை மீட்பு படையினர் மீட்டனர். அதில் டாரஸ் வாகனத்துடன் நிலச்சரிவில் சிக்கிய கேரளாவை சேர்ந்த அர்ஜுனை மீட்பு படையினர் தேடி வருகிறார்கள். இவர் 200 டன் எடை கொண்ட மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டு அந்த வழியே சென்ற போது நிலச்சரிவில் சிக்கியுள்ளார். தனது மகனை மீட்குமாறு அவருடைய தாய் அஞ்சு, கேரள அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே கர்நாடகா அரசு சரியாக மீட்பு பணிகளை மேற்கொள்ளவில்லை என அர்ஜுனின் தாயார் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார். அங்கு உயர்நீதிமன்றம் செல்லுமாறு அறிவுறுத்தியதால் அந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய , மாநில அரசை விளக்கம் தரவும் என ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் கங்கவள்ளி ஆற்றில் மரக்கட்டைகள் மிதந்து வந்ததால் அர்ஜுன் தனது லாரியுடன் ஆற்றில் மூழ்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. 15க்கும் மேற்பட்ட குழுவினர் அர்ஜுனை தேடி வருகிறார்கள். அர்ஜுன் 20 அடி ஆழத்தில் புதையுண்டதாக தெரிகிறது. அவரை தேடி வருகிறார்கள். தற்போது வரை கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த சின்னப்பன், முருகன் ஆகிய லாரி ஓட்டுநர்களும் ஆவர்.

இந்த நிலையில் நாமக்கல்லைச் சேர்ந்த டிரைவர் சரவணனை தேடி வந்தனர். அப்போது இடுப்புக்கு கீழ் பாகம் மட்டுமே இருக்கும் ஒரு ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அது சரவணனாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த சடலத்திற்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவு செய்தபோது சரவணனின் தாயாரின் டிஎன்ஏவுடன் அந்த சடலத்தின் டிஎன்ஏ ஒத்து போகிறது. எனவே இறந்தவர் சரவணன் என உறுதியானது.

இந்த நிலையில்தான் சின்னப்பன், முருகன், சரவணன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+