அடேங்கப்பா.. செல்ல நாய் பிறந்த நாளை.. 100 கிலோ கேக் வெட்டி கொண்டாடிய கர்நாடக தொழிலதிபர்!
பெங்களூர்: கர்நாடகாவில் நாய் ஒன்றுக்குக் கொண்டாடப்பட்ட பிறந்த நாள் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
நாய்கள் எப்போதுமே மனிதர்களுக்குச் சிறந்த நண்பராக இழந்து வருகின்றன. நம்மைச் சுற்றி உள்ள மனிதர்கள் நம்மைக் கைவிட்ட போதிலும் நாய்கள் நம்மைக் கைவிடாது.
ஆபத்தான சூழ்நிலைகளில் தங்கள் உயிரிகளைத் துச்சம் என நினைத்துப் பல நேரங்களில் நாய்கள் நமக்கு ஓடோடி வந்து உதவி உள்ளன.

நாய்
அப்படிப்பட்ட நாய்களைப் பலரும் தங்கள் குடும்பங்களில் ஒரு நபராகவே கருதுகின்றனர். இதனால் தான் பல ஆயிரம் செலவழித்து நாய்களைப் பார்த்துக் கொள்வது, நாய்கள் உயிரிழந்தால் அதற்கு நினைவிடங்கள் கட்டும் வேலைகளைப் பலரும் செய்துள்ளனர். இந்தச் சூழலில் கர்நாடகாவில் ஒருவர் அனைவரையும் தூக்கிச் சப்பிடும் அளவுக்குச் செல்ல நாய்க்கு சப்ரைஸ் கிப்ட் கொடுத்துள்ளார்.

நாய்
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் முதலாகி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவப்பா. இவர் தனது வீட்டில் பாதுகாப்புக்காக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நாய்க்குச் சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அதைக் கொண்டாடும் வகையில் நாய்க்கு இவர் கேக் வெட்டியுள்ளார். அட இதில் என்ன பெரிய விஷயம் எனக் கேட்கிறீர்களா!

100 கிலோ கேக்
நாய்க்கு வெட்டப்பட்ட கேக் சுமார் 100 கிலோ எடை கொண்டது. நாயின் பிறந்த நாள் விழாவில் பலர் கலந்து கொண்டனர். மேலும், நாய் பிறந்த நாளை முன்னிட்டு சுமார் 4000 பேருக்கு உணவும் கொடுக்கப்பட்டுள்ளது. நாயின் பிறந்த நாள் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

நெட்டிசன்கள்
அதில் நாய் கேக் வெட்டுவதும், அப்போது அங்குக் கூடி இருந்தவர்கள் உற்சாகப்படுத்துவதும் தெரிகிறது. நெட்டிசன்கள் பலரும் செல்ல பிராணிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரம் தனது பிறந்த நாளுக்கு அரை கிலோ கேக் வாங்கி தரக் கூட இல்லை. ஆனால் இந்த நாய்க்கு 100 கிலோ கேக்கா என அங்கலாய்ப்பு படும் நெட்டிசன்களும் இருக்கவே செய்கிறார்கள்.












Click it and Unblock the Notifications