2-வது அலை எச்சரிக்கை ...இரவு நேர ஊரடங்கு...புத்தாண்டு பார்ட்டிக்கு தடை... கர்நாடகா முடிவு!
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஜனவரி பிப்ரவரி மாதத்தில் கொரோனா இரண்டாவது அலைக்கு வாய்ப்பு உள்ளதால் அங்கு புத்தாண்டு பார்ட்டிக்கு தடை விதிக்கவும், புத்தாண்டு ஒரு வாரத்திற்கு முன்னர் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தவும் அந்த மாநில அரசு திட்டமிட்டு வருகிறது.
கர்நாடகாவில் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. மக்கள் நன்கு விழிப்புடன் இருந்தால் மட்டுமே தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என அரசு மக்களிடம் வலியுறுத்தி உள்ளது.

கொரோனா காலகட்டத்தில் நாட்டில் முதன்முதலாக அதிக தளர்வுகளை அளித்தது கர்நாடக மாநிலம்தான். இங்குதான் முதலில் இ-பாஸ் முறை ஒழிக்கப்பட்டது. அனைத்துத் நடவடிக்கையும் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அங்கு இன்னும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இந்த நிலையில் அங்கு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கொரோனா 2-வது ஏற்பட்ட வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
கர்நாடகாவில் பெங்களூரு உள்ளிட்ட மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டும் என்பதால், கொரோனா அதிக அளவு பரவ வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தை தவிர்க்கும் வகையில் டிசம்பர் 26 முதல் ஜனவரி 1 வரை இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கலாம் என அந்த மாநில தொழில்நுட்ப ஆலோசனைக் குழு சுகாதாரத் துறையிடம் பரிந்துரை செய்துள்ளது.
குறிப்பாக பெங்களுருவில் உள்ள ஹோட்டல்கள், ரிஸார்ட்டுகள், பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு பார்ட்டியை கட்டுப்படுத்த வேண்டும் என அந்த குழு வலியுறுத்தி உள்ளது. தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளை நாங்கள் அரசிடம் கொண்டு செல்வோம். இது பற்றி அரசு நல்ல முடிவு எடுத்து அறிவிக்கும் என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications