2-வது அலை எச்சரிக்கை ...இரவு நேர ஊரடங்கு...புத்தாண்டு பார்ட்டிக்கு தடை... கர்நாடகா முடிவு!
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஜனவரி பிப்ரவரி மாதத்தில் கொரோனா இரண்டாவது அலைக்கு வாய்ப்பு உள்ளதால் அங்கு புத்தாண்டு பார்ட்டிக்கு தடை விதிக்கவும், புத்தாண்டு ஒரு வாரத்திற்கு முன்னர் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தவும் அந்த மாநில அரசு திட்டமிட்டு வருகிறது.
கர்நாடகாவில் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. மக்கள் நன்கு விழிப்புடன் இருந்தால் மட்டுமே தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என அரசு மக்களிடம் வலியுறுத்தி உள்ளது.

கொரோனா காலகட்டத்தில் நாட்டில் முதன்முதலாக அதிக தளர்வுகளை அளித்தது கர்நாடக மாநிலம்தான். இங்குதான் முதலில் இ-பாஸ் முறை ஒழிக்கப்பட்டது. அனைத்துத் நடவடிக்கையும் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அங்கு இன்னும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இந்த நிலையில் அங்கு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கொரோனா 2-வது ஏற்பட்ட வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
கர்நாடகாவில் பெங்களூரு உள்ளிட்ட மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டும் என்பதால், கொரோனா அதிக அளவு பரவ வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தை தவிர்க்கும் வகையில் டிசம்பர் 26 முதல் ஜனவரி 1 வரை இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கலாம் என அந்த மாநில தொழில்நுட்ப ஆலோசனைக் குழு சுகாதாரத் துறையிடம் பரிந்துரை செய்துள்ளது.
குறிப்பாக பெங்களுருவில் உள்ள ஹோட்டல்கள், ரிஸார்ட்டுகள், பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு பார்ட்டியை கட்டுப்படுத்த வேண்டும் என அந்த குழு வலியுறுத்தி உள்ளது. தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளை நாங்கள் அரசிடம் கொண்டு செல்வோம். இது பற்றி அரசு நல்ல முடிவு எடுத்து அறிவிக்கும் என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.
-
பெங்களூருவில் இப்படி ஒரு காதலியா? விடிய விடிய வாட்ஸ்-அப் வீடியோ கால்! பேரதிர்ச்சியில் ஐடி இன்ஜினீயர் -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications