100 ஆபாச வீடியோ.. 30 பெண்கள்.. இதுக்காகவே தனியாக சொந்த வீடு! மெடிக்கல் ஷாப் ஓனரால் ஆடிப்போன கர்நாடகா
பெங்களூரு: மெடிக்கல் ஷாப்புக்கு மருந்து வாங்க வரும் பெண்கள், பலரை ஏமாற்றி பலாத்காரம் செய்திருக்கிறார், அந்த மருந்துக்கடை ஓனர்.. பெரும்பாலும் பணத்தாசை காட்டியே அவர்களை ஏமாற்றி வன்கொடுமை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதான் கர்நாடக மாநிலத்தில் பகீரை கிளப்பிவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி டவுன் பகுதியில், மருந்துக்கடை வைத்து நடத்தி வருகிறார் அம்ஜத். இவருக்கு திருமணமாகிவிட்டது.. மெடிக்கல் ஷாப் வைத்திருக்கும் பகுதியிலேயே, குடும்பத்துடன் வசித்து வருகிறார் அம்ஜத்..

மருந்துக்கடை: இந்த நிலையில் இவரது மருந்து கடைக்கு வரும் பெண்களை பணத்தாசை காட்டியும், அவர்களுக்கு உதவுவதுபோல் நடித்தும், தன்னுடைய வலையில் விழ வைத்திருக்கிறார்.. அத்துடன் அவர்களை பாலியல் வன்கொடுமையும் செய்து வந்துள்ளார்..
இதற்காகவே சொந்தமாக ஒரு வீட்டை வைத்திருக்கிறாராம் அம்ஜத்.. அந்த வீட்டுக்கு வரவழைத்து அப்பெண்களை சீரழித்துள்ளார்.. அத்துடன், அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, அந்த பெண்களை மிரட்டி மீண்டும், மீண்டும் வரவழைத்து பாலியல் செய்து வந்திருக்கிறார்.
பலாத்காரம்: இப்படியே 30-க்கும் மேற்பட்ட பெண்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சில பெண்கள், சென்னகிரி போலீசிலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்திடமும் புகார் தந்தனர்.. இந்த புகாரின்பேரில், உடனடியாக விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் உத்தரவிட்டார்.
அதன்படியே, வழக்குப்பதிவு செய்த போலீசார் துரிதமான விசாரணையில் இறங்கினார்கள்.. இறுதியில், 30 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்திருந்தது உறுதியானது.. அதுமட்டுமல்லாமல், அவரது செல்போனில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். இதையடுத்து, அம்ஜத்தை கைது செய்து, ஜெயிலில் அடைத்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
எச்சரிக்கை: ஆனால், அதற்குள் அம்ஜத் செல்போனிலிருந்த ஆபாச வீடியோக்கள் திடீரென சோசியல் மீடியாக்களில் பரவ தொடங்கிவிட்டது.. வாட்ஸ்அப் குரூப்களிலும் பரவி வைரலாகி விட்டது. இதைப்பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், திடீரென மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. "யாரும் ஆபாச வீடியோக்களை பகிரக்கூடாது , இதை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications