கர்நாடகாவில் பஞ்சாயத்தை கிளப்பிய புதிய தொழிலாளர் சட்டம்! குறைந்தபட்ச ஊதியத்தை இழக்கும் தொழிலாளர்கள்
பெங்களூர்: கர்நாடகாவில் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அடிப்படை ஊதியம் என்பது மாற்றியமைக்கப்படும். ஆனால் கடந்த 2017-18லிருந்து இது மாற்றப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் இதனை மாற்ற அரசு தயாராகி வரும் நிலையில், தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு திருத்தியிருக்கிறது. இதனால் குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு நிர்ணயிக்கும் வரை, கர்நாடக அரசு காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக பஞ்சாயத்து கிளம்பியிருக்கிறது.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 4 புதிய சட்ட திருத்தம், கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சட்ட திருத்தம் கர்நாடகாவில் 2 முக்கியமான பிரச்சனைகளை கிளப்பி இருக்கிறது.

அடிப்படை திறமை கொண்ட தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.19,319 அளவுக்கும், திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.31,000 அளவுக்கும் அடிப்படை சம்பளத்தை உயர்த்த கர்நாடக அரசு திட்டமிட்டு இருந்தது. இதற்கான முன்மொழிவை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. விரைவில் மாநிலம் முழுவதும் இந்த அடிப்படை ஊதியத்தில் திருத்தம் அமலாகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மத்திய அரசின் சட்டங்கள் இதனை தடுத்திருக்கின்றன.
அதாவது அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்க மாநில அரசுக்கு உரிமை கிடையாது என்று, முதலாளிகள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். அதேபோல கர்நாடக அரசு முன்மொழிந்த திருத்தப்பட்ட ஊதியம் தொடர்பான அட்டவணையில், 81 வேலைகள் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்களில் அட்டவணைப்படுத்தப்பட்ட வேலைகள் என்கிற பிரிவே இல்லை. எனவே இந்த 81 வேலைகளில் இருக்கும் தொழிலாளர்களின் அடிப்படை ஊதிய உயர்வு தற்போது நிறுத்தப்பட்டு இருக்கிறது.
இரண்டாவது பிரச்சினை குறைந்தபட்ச ஊதியம் தொடர்பானது. குறைந்தபட்ச ஊதியம் தொழிலாளியின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமானதாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறது. ஆனால், மத்திய அரசின் தொழிலாளர் நல சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதிய அளவு போதுமானதாக இல்லை என்பதே விமர்சனம்.
புதிய சட்டத்தின்படி குறைந்தபட்ச ஊதியத்தின் ஒரு பகுதியாக கருதப்படும் வீட்டு வாடகை படி, குறிப்பிட்ட வரம்புக்குள் வைக்கப்படுகிறது. அதாவது உணவு மற்றும் ஆடை செலவுகளின் மதிப்பில் 10% வீட்டு வாடகைக்கான படியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஒரு தொழிலாளி அடிப்படை உணவு மற்றும் ஆடை தேவைகளுக்காக ஒரு மாதத்திற்கு ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை செலவு செய்வதாக அரசு கணித்திருக்கிறது. இந்த செலவில் இருந்து 10% வீட்டு வாடகை படியாக குறைந்தபட்ச ஊதியத்தில் கொடுக்க வேண்டும் என்று புதிய சட்ட திருத்தம் கூறுகிறது.
அப்படி எனில் ரூ.1,000 அல்லது ரூ.1,200 வீட்டு வாடகை படியாக கொடுக்கப்படும். இவ்வளவு 'பெரிய' தொகையை வைத்து பெங்களூரில் ஒரு சிறிய அறையைக் கூட வாடகைக்கு எடுக்க முடியாது. எனவே இது யதார்த்தத்திற்கு முற்றிலும் பொருந்தாததாக இருப்பதாக தொழிற்சங்கங்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளன.
-
கைக்கு வரும் சம்பளம் குறைகிறதா? புதிய தொழிலாளர் சட்டம் அமலுக்கு வந்தது.. என்னென்ன மாறும்? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்!












Click it and Unblock the Notifications