நாட்டையே உலுக்கிய படுகொலை.. கவுரி லங்கேஷ் கொலையாளியுடன் பாஜக மாஜி எம்பி நெருக்கம்! போட்டோ ரிலீஸ்
பெங்களூர்: பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேசை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வழக்கில் கைதான நவீன் குமாரின் தோளில் கைபோட்டு பாஜக முன்னாள் எம்பி பிரதாப் சிம்ஹா சகஜமாக பேசும் போட்டோவை வெளியிட்டு கர்நாடகா அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பரபரப்பை கிளப்பி உள்ளார். மேலும் இதன்மூலம் பாஜக முன்னாள் எம்பி பிரதாப் சிம்ஹா சமூகத்துக்கு எந்த செய்தியை சொல்ல வருகிறார்? என்று கேள்வி கேட்டு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கர்நாடகாவில் மூத்த பத்திரிகையாளராக இருந்தவர் கவுரி லங்கேஷ். லங்கேஷ் பத்திரிகை என்ற பெயரில் பத்திரிகையை நடத்தி அதன் ஆசிரியராக இருந்து வந்தார். இவர் இடதுசாரி சிந்தனைகள் கொண்டவர். மேலும் மனித உரிமை ஆர்வலராகவும் செயல்பட்டு வந்தார்.

இவர் தனது பத்திரிகையில் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினரை விமர்சனம் செய்து கட்டுரைகள் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தான் கடந்த 2017 ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டார்.
பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரில் கவுரி லங்கேஷ் வசித்து வந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் அவரை துப்பாக்கியால் சுட்டு தப்பித்து சென்றனர். இந்த சம்பவம் கர்நாடகா மட்டுமின்றி மொத்த இந்தியாவையும் உலுக்கியது. இந்த வழக்கில் இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் வழக்கில் கைதான மத்தூர் நவீன் குமார், சுரேஷ் மற்றும் அமித் ஆகியோருக்கு பெங்களூர் உயர்நீதிமன்றம் கடந்த மாதம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் தான் கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் (காங்கிரஸ்) தற்போது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அதாவது கவுரி லங்கேஷ் கொலையில் கைது செய்யப்பட்ட மத்தூர் நவீன் குமாருடன், மைசூர் - குடகு லோக்சபா தொகுதியின் முன்னாள் எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு தொடர்பு உள்ளதாக போட்டோ வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக தினேஷ் குண்டுராவ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோவில் பாஜகவின் முன்னாள் எம்பி பிரதாப் சிம்ஹா, கவுரி லங்கேஷ் கொலையில் கைதான மத்தூர் நவீன் குமார் தோளில் கைபோட்டு பேசியபடி இருக்கிறார்.
மேலும் இந்த பதிவில் தினேஷ் குண்டுராவ், ‛‛இதுதான் கோட்சேவை வழிபடும் பாஜகவின் உண்மை முகம். கொலை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு சமூகத்தில் அமைதியை சீர்க்குலைக்கும் நபர்கள் பாஜகவின் கருவறையில் இருக்கிறார்கள். தைரியமான பத்திரிகையாளராக அறியப்படும் கவுரி லங்கேசை கொன்றதை கண்டிக்காமல், வழக்கில் கைதான குற்றவாளியின் தோள் மீது கைபோட்டு பேசுவதன் மூலம் பாஜகவின் முன்னாள் எம்பி சமூகத்துக்கு எந்த செய்தியை சொல்ல வருகிறார்?'' என்ற கேள்வியை எழுப்பி உள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications