கர்நாடகாவில் ஆக்ஸிஜனுக்கு கடும் தட்டுப்பாடு.. கலபுராகி, பெலெகாவியில் 7 பேர் மரணம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கர்நாடக மாநிலம் கலபுராகி, பெலெகாவியில் 7 பேர் ஒரே நாளில் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் ஏற்கனவே தமிழகத்தில் ஈரோடு மாவட்ட எல்லையை ஒட்டிய சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் 24 பேர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலியாகி இருந்த நிலையில் மேலும் 7 பேர் பலியாகி உள்ளது அங்குள்ள மக்களிடையே கவலையை அதிகரித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. ஏராளமானோர் ஆக்ஸிஜன் வசதி, ஐசியு படுக்கை வசதி கிடைக்காமல் தவிக்கிறார்கள். உயிரிழப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.

நோயாளிகள் அதிகம்

நோயாளிகள் அதிகம்

மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறும் நிலை காணப்படுகிறது. இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இன்று காலை கலாபுராகி அரசு மருத்துவமனையில் நான்கு பேரும், பெலகாவி அரசு மருத்துவமனையில் மூன்று பேரும் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மோசமான நிலை இல்லை

மோசமான நிலை இல்லை

ஆனால் இருப்பினும், கலபுராகி மாவட்டத்தின் பொறுப்பாளரான சுரங்க மற்றும் புவியியல் துறை அமைச்சர் முருகேஷ் நிரானி, இறந்தவர்களுக்கு கொரோனா தொற்று மோசமான நிலையில் இருந்தாக கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்தார்.

28 பேர் மரணம்

28 பேர் மரணம்

ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக சாம்ராஜ் நகர் மாவட்ட மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களில் 24 கோவிட் -19 நோயாளிகள் இறந்த அடுத்த ஓரிரு நாளில் நடந்த இந்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தை உலுக்கி உள்ளது. இதனிடையே செவ்வாய்க்கிழமை சாம்ராஜ்நகர் மாவட்ட மருத்துவமனைக்கு பயணம் செய்த எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திங்கள் காலை வரை 28 பேர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலியாகி உள்ளனர். இறந்தது 23 பேர் என்று கூறுவது பொய்யான தகவல் என்றார்.

சித்தராமையா

சித்தராமையா

இந்த சம்பவம் ஆளும் பாஜகவின் மோசமான நிர்வாகத்திறனை பிரதிபலிப்பதாக சித்தராமையா குற்றம் சாட்டினார், மேலும் COVID-19 நிலைமையை சரியாக கையாளாத சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகர் அப்பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்று கோரினார்.

பொறுப்பாளராக நியமனம்

பொறுப்பாளராக நியமனம்


இதனிடையே ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தீவிரமாக கருத்தில் கொண்டு, கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா பெரிய மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரை ஆக்ஸிஜன் விநியோகத்தை ஏற்பாடு செய்யவும், மாநில அரசாங்கத்தின் ஆக்ஸிஜனைப் பெற மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் குழுவிற்காக பொறுப்பாளராக நியமித்துள்ளார்.

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு

இதற்கிடையில், பெங்களூரில் ஒரு சில மருத்துவமனைகள் ஆபத்தான ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன.. யெலஹங்காவில் உள்ள சைதன்யா மருத்துவ மனையின் நிர்வாகி, கூறுகையில் "இப்போது எங்களுக்கு ஆக்சிஜன் இருப்பு கிடைத்துள்ளது, இது இரண்டு முதல் மூன்று நாட்கள் நீடிக்கும், ஆனால் நாங்கள் எங்கள் நோயாளிகள் அனைவரையும் நேற்று மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றினோம், ஏனெனில் எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆக்ஸிஜன் பங்கு தீர்ந்துவிட்டது" என்றார். பெங்களூருவின் ஆர்.டி.நகரில் உள்ள மெடாக்ஸ் மருத்துவமனைகளும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தெரிவித்துள்ளன. இதேபோல் பல்வேறு மருத்துவமனைகளும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து கவலை தெரிவித்துள்ளன,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+