கர்நாடகா 'இரட்டை வேடம்'..காவிரி நீர் திறப்பை பட்டுன்னு பாதியாக குறைத்தது..அணைகள் நீர்மட்டம் குறையலை!
பெங்களூர்: காவிரி ஒழுங்காற்று குழு கூடிய நிலையில் காவிரியில் தமிழ்நாட்டுக்கு கூடுதல் நீரை திறந்துவிட்ட கர்நாடகா தற்போது அந்த அளவை பாதியாக குறைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிய அளவான வினாடிக்கு 24,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட மறுத்தது. இதனையடுத்து காவிரி ஒழுங்காற்று குழு ஆய்வு நடத்தி தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடிநீரை திறந்துவிட பரிந்துரைத்தது. இதனை காவிரி மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

கர்நாடகா போராட்டம்: ஆனால் காவிரியில் போதுமான நீரை கர்நாடகா திறக்கவில்லை. இதற்கு காரணமாக கர்நாடகா பாஜக தூண்டிவிட்ட கன்னட விவசாயிகள், கன்னட அமைப்புகளின் போராட்டங்கள் சொல்லப்பட்டன. தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீர் திறக்கப்படாத நிலையில் காவிரி டெல்டாவில் பயிர்கள் கருகிப் போயின. ஆனாலும் ஈவிரக்கமே இல்லாமல் கர்நாடகாவில் தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரையும் திறக்கக் கூடாது என போராட்டங்கள் தொடர்ந்தன.
3,000 கன அடி நீர்: இதனிடையே தற்போது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு 16,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தியது தமிழ்நாடு. ஆனாலும் இம்முறையும் 3,000 கன அடிநீரை திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தது. இதனடிப்படையில் இன்று கூடும் காவிரி மேலாண்மை ஆணையமும் 3,000 கன அடி நீரை பரிந்துரைக்க உள்ளது.
கூடுதல் நீர் திறப்பு: இதனிடையே தமிழ்நாட்டுக்கு கடந்த சில நாட்களாக திடீரென கூடுதல் காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட்டது. காவிரியில் வினாடிக்கு 8615 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட்டது. மேலும் தமிழ்நாட்டின் மேட்டூர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சற்று கூடுதலாக இருந்தது.

நீர் திறப்பு குறைப்பு: தற்போது திடீரென தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் திறப்பை வெகுவாக குறைத்துவிட்டது. தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 4698 கன அடி நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.
கர்நாடகா அணைகள் நீர் இருப்பு: கர்நாடகாவின் கேஆர்எஸ் (கிருஷ்ணராஜ சாகர்) அணையில் தற்போது 100.64 அடி நீர் உள்ளது. கபினி அணையில் 57.2 அடி நீர் இருக்கிறது. இந்த அணைகளின் காவிரி நீர் மூலம் தமிழ்நாட்டுக்கு வந்து சேரும் மேட்டூர் அணையிலோ வெறும் 33.1 அடி நீர் மட்டுமே உள்ளது. இவ்வளவு காவிரி நீரை அடைத்து வைத்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு 3,000 கன அடி நீரை கூட திறக்க முடியாது என காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிடுவோம் என்கிறது கர்நாடகா. இதைவிட பெருங்கொடுமை வேறேது?
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications