தமிழகத்துக்கு கர்நாடகா காங். அரசு துரோகம்- காவிரியில் மேகதாது அணை கட்ட நிலம் கையகப்படுத்துகிறதாம்!
பெங்களூர்: தமிழ்நாட்டுக்கு எதிராக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நிலம் கையகப்படுத்தும் பணிகளை கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு தீவிரப்படுத்தும் என குடியரசு தின விழா உரையில் அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காவிரி நதியின் குறுக்கே கர்நாடகாவின் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே (கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தொகுதி) மேகதாதுவில் புதியதாக அணை கட்டுவதில் அம்மாநிலத்தில் ஆண்ட பாஜக, ஆளும் காங்கிரஸ் அரசுகள் தீவிரம் காட்டுகின்றன. இதற்கு தமிழ்நாடு அரசுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றன.

தமிழ்நாட்டின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது கர்நாடகா அரசு. ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு இதுவரை இத்திட்டத்துக்கு எந்த ஒப்புதலும் தரவில்லை. மத்திய அரசு ஒப்புதல் தராத நிலையிலேயே மேகதாது அணை கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை கர்நாடகா அரசு தொடங்கியது. இதனையும் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்தது. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
ஆனால் சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே மேகதாது அணையை கட்டி முடிப்போம். பெங்களூர் மாநகரின் குடிநீர் தேவைக்காகவே மேகதாது அணை கட்டப்படுகிறது என மீண்டும் கூறியிருந்தார்.
இப்பின்னணியில் குடியரசு தின விழா நேற்று கர்நாடகா தலைநகர் பெங்களூரில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய கர்நாடகா மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட், மேகதாதுவில் புதிய அணை கட்டும் பணிகளை விரைவுபடுத்த நிலம் கையகப்படுத்தப்படும். கையகப்படுத்தப்படும் வனத்துறை நிலத்துக்கு இணையாக வேறு நிலம் வழங்கப்படும். இந்த பணிகள் அனைத்துமே தீவிரமாக செயல்படுத்தப்படும் என குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் தொடர்ச்சியான எதிர்ப்பை புறக்கணித்து கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்யும் வகையில் மேகதாது அணையை கட்டுவதில் தீவிரம் காட்டுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications