சிரித்தபடியே சபாநாயகர் சொன்ன ஒரு வார்த்தை! தகுதி நீக்கம் பற்றி கோலார் பிரசாரத்தில் வருந்திய ராகுல்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை ராகுல் காந்தி இன்று தொடங்கினார். கோலாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் அதானி விவகாரத்தை முன்வைத்து பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். மேலும் தகுதி நீக்கத்துக்கு முன்பு நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா சிரித்தபடியே கூறிய வார்த்தையை நினைவு கூர்ந்த ராகுல் காந்தி மிகவும் வருந்தினார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி நடக்கிறது. காங்கிரஸ் சார்பில் 3 கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ராகுல் காந்தி உள்பட மேலிட தலைவர்கள் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். ராகுல் காந்தி இன்று முதல் பிரசாரத்தை தொடங்கினார்.

கடந்த 2019 தேர்தலில் கோலார் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையானது. மோடி பெயர் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி 2 ஆண்டு சிறை தண்டனை பெற்று வயநாடு எம்பி பதவியை இழந்துள்ளார். 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் இன்று மீண்டும் கோலாரில் இருந்தே கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை ராகுல் காந்தி தொடங்கி உள்ளார்.
இந்த கோலார் பிரசாரம் முதலில் ஏப்ரல் 5ம் தேதி முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு 6, 9, 10 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று நடக்கிறது. இந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக ராகுல் காந்தி இன்று பெங்களூர் வந்தார். பெங்களூரில் இருந்து அவர் கோலார் சென்று பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது ராகுல் காந்தி பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் அதானிக்கு பிரதமர் மோடி உதவியதாக குற்றம்சாட்டினார். இதுபற்றி ராகுல் காந்தி பேசியதாவது:
பிரதமர் மோடி அதானிக்கு முழுமனதுடன் உதவி செய்து வருகிறார். நாங்கள் முழுமனதுடன் கர்நாடகா மக்களுக்கு உதவி செய்வோம். பிரதமர் மோடியால் பல ஆயிரம் கோடியை அதானிக்கு கொடுக்க முடியும்போது எனும்போது எங்களாலும் மக்களுக்காக பணம் கொடுக்க முடியும். கர்நாடகாவில் பாஜக அரசு 40 சதவீத கமிஷனில் இயங்கியது. இதுபற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினோம். இன்று வரை பதில் வரவில்லை. இதன்மூலம் 40 சதவீத கமிஷனை பிரதமர் மோடி ஏற்று கொள்கிறார் என்றே அர்த்தம்.
என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு கடிதங்கள் எழுதினேன். எனக்கு வாய்ப்பு அளிக்கப்படவே இல்லை. இதுபற்றி கேட்டபோது அவர் சிரித்து கொண்டே என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றார். அவருடன் சேர்ந்து டீ குடிக்க கூறினார். அப்போது நீங்கள் சபாநாயகர் நாடாளுமன்றத்தில் நீங்கள் விரும்புவதை செய்யலாம். ஆனால் நீங்கள் ஏன் அதை செய்ய மறுக்கிறீர்கள் என கேட்டேன். அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்க அவர் பயப்படுகிறார். அதோடு நானும் நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டேன்.
அதானிக்கு ெஷல் கம்பெனி உள்ளதாக நான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன். மேலும் 20 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர்கள் யார்? என கேள்வி எழுப்பினேன். பொதுவாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சியினர் முடக்குவார்கள். ஆனால் வரலாற்றில் முதல் முறையாக ஆளும் பாஜகவே நாடாளுமன்றத்தை முடக்கி உள்ளது'' என காட்டமாக விமர்சனம் செய்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications