நிறுத்துங்க! முஸ்லீம்களை நிம்மதியா வாழ விடுங்கள்! கொதித்த எடியூரப்பா! பாஜகவிலிருந்து முதல் எதிர்ப்பு
பெங்களூர்: இஸ்லாமியர்களை வாழ விடுங்கள். அவர்களை நிம்மதியாகவும், மரியாதையுடனும் வாழ விடுங்கள் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையான வெறுப்பு பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. அங்கு ஹிஜாப் தடை ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளில் அமலுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் அங்கு இஸ்லாமிய கடைகளில் பொருட்கள் வாங்க கூடாது என்று பல்வேறு இந்துத்துவா அமைப்புகள் போராட்டம் செய்து வருகின்றன.
அதேபோல் ஹலால் உணவுகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் கடுமையான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இஸ்லாமியர் பிரச்சாரம்
இஸ்லாமியர்களை பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிப்படைய செய்யும் வகையில் இந்த பிரச்சாரங்கள் திட்டமிடப்பட்டு நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இது போக இஸ்லாமியர்கள் ஓட்டும் கார்கள், வாகனங்களில் ஏற கூடாது. அவர்களை இந்துக்கள் பணிக்கு அமர்த்த கூடாது என்றும் இந்துத்துவா அமைப்புகள் மிக மோசமான பிரச்சாரத்தில் இறங்கி உள்ளது. முக்கியமாக ஸ்ரீ ராம சேனா என்ற அமைப்பு இஸ்லாமியர்களுக்கு எதிராக பல்வேறு இடங்களில் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

வன்முறைகள்
இந்த நிலையில்தான் தற்போது கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான எடியூரப்பா இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்த வெறுப்பு பிரச்சாரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், இஸ்லாமியர்களை வாழ விடுங்கள். அவர்களை நிம்மதியாகவும், மரியாதையுடனும் வாழ விடுங்கள். இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதே என் நோக்கம்.

தாய் பிள்ளை
அவர்கள் ஒரு தாய் பிள்ளையாக ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. இதை யார் விரும்பவில்லையோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதை முதல்வர் பஸ்வராஜ் பொம்மையும் உறுதிப்படுத்தி இருக்கிறார். பொம்மை சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். மாநிலத்தில் அமைதியை குலைக்கும் வகையில் சம்பவங்கள் நடத்த கூடாது.

அமைதி
இனி வரும் நாட்களில் கர்நாடகாவில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்க கூடாது. நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். விரும்பத்தகாத சம்பவங்கள் மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை நிறுத்துமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சாரங்களை எதிர்த்த பாஜகவை சேர்ந்த ஒரே பெரிய தலைவர் எடியூரப்பா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications