மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்?
பெங்களூர்: கர்நாடகாவின் புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியின் டிகே சிவக்குமார் இன்று பொறுப்பேற்றார். இதையடுத்து அவரது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டது. அதன்படி மதுரையை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர சோழன், கர்நாடகா முதல்வரின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த ராஜேந்திர சோழன் யார்? டிகே சிவக்குமாரின் நம்பிக்கையை பெற்றது எப்படி? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக முதல்வராக இருந்த சித்தராமையா கடந்த மாதம் 28 ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக டிகே சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து இன்று கர்நாடகாவின் புதிய முதல்வராக டிகே சிவக்குமார் பதவியேற்றார். கர்நாடகா ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் டிகே சிவக்குமாருக்கு கர்நாடகா ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
டிகே சிவக்குமாருடன் இன்று 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் பரமேஸ்வர் துணை முதல்வரான நிலையில் மற்ற 12 பேர் அமைச்சர்களாக செயல்பட உள்ளனர். விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அப்போது இன்னும் எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக செயல்பட உள்ளனர்.
டிகே சிவக்குமார் முதல்வரானதும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி நகர மேம்பாட்டு துறையின் கூடுதல் முதன்மை செயலாளராக இருந்த துஷார் கிரி நாத், கர்நாடகா முதல்வரின் கூடுதல் முதன்மை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார். இவர் நகர மேம்பாட்டு துறையின் கூடுதல் முதன்மை செயலாளர் பொறுப்பையும் சேர்ந்து கவனிக்க உள்ளார்.
அதேபோல் கர்நாடகா துணை முதல்வரின் செயலாளராக செயல்பட்டு வந்த ராஜேந்திர சோழன் ஐஏஎஸ், முதல்வரின் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதில் ராஜேந்திர சோழன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். மதுரை மாவட்டம் அழகப்பம்பட்டியை சேர்ந்த இவர் கடந்த 2008 ம் ஆண்டில் சிவில் சர்வீசஸ் தேர்வில் பாஸானார். இந்திய அளவில் 31வது இடம் பிடித்து கர்நாடகாவில் பணிக்கு சேர்ந்தார்.
இவர் டிகே சிவக்குமாரின் நம்பிக்கையை பெற்றவராக உள்ளார். இதனால் தான் டிகே சிவக்குமார் துணை முதல்வராக இருந்தபோது அவரை தனது செயலாளராக வைத்து இருந்தார். இப்போது டிகே சிவக்குமார் முதல்வரான நிலையில் ராஜேந்திர சோழனையும் தனது செயலாளராக பணியாற்ற வாய்ப்பு வழங்கி உள்ளார். ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர சோழன் கர்நாடகா முதல்வரின் செயலாளர் பதவியோடு கர்நாடகா மின் கார்ப்பரேஷன் லிமிடெ்டடின் நிர்வாக இயக்குநராகவும் பொறுப்பு வகிக்க உள்ளார்.
-
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications