"இந்தியாவை" எதிர்க்க பாஜகவால் முடியுமா.. எதிர்க்கட்சிகள் கூட்டணியில் மம்தா பரபர பேச்சு
பெங்களூர்: இன்று பெங்களூரில் நடந்த எதிர்க்கட்சி கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பாஜகவால் ஒரு போதும் இந்தியாவை (இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி) வீழ்த்த முடியாது என்றார்.
அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் எதிர்கொள்ள வேண்டும் என்பதைப் பலரும் வலியுறுத்தினர். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் திரண்டால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்பது அவர்கள் எண்ணம்.

இதற்கான முன்னெடுப்பை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எடுத்த நிலையில் முதல் கூட்டம் கடந்த மாதம் பாட்னாவில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது கூட்டம் இன்று பெங்களூரில் நடந்தது.
சோனியா காந்தி இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். இந்தக் கூட்டத்தில் தான் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு இந்தியா என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதாவது I.N.D.I.A- Indian National Developmental Inclusive Alliance இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என்று கூட்டணிக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தை நடத்திய கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்த மம்தா பானர்ஜி, இந்த கூட்டம் மிக சிறப்பாக இருந்ததாகவும் பல முக்கிய விஷயங்கள் இதில் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், "தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் பாஜகவால் இந்தியாவுக்கு (எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பெயர் I.N.D.I.A) சவால் விட முடியுமா.. நாங்கள் எங்கள் தாய்நாட்டை நேசிக்கிறோம். நாங்கள் நாட்டின் மீது பற்றுள்ள மக்கள். விவசாயிகள், தலித் மக்கள் என நாட்டில் இருக்கும் அனைவருக்கும் நாங்கள் நிற்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்தக் கூட்டணிக்கான பெயரை அறிவித்தார். மேலும், அடுத்த எதிர்க்கட்சி கூட்டம் மும்பையில் நடைபெறும் என்றும், அங்கு 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். கூட்டணிக்கு யார் கன்வீனர் என்று கேள்விக்கு அவர், மும்பை கூட்டத்தில் ஒருவர் முடிவு முடிவு செய்யப்படுவார் என்று தெரிவித்தார். மேலும், கன்வீனர் யார் என்பதெல்லாம் சின்ன விஷயம் என்றும் அவர் தெரிவித்தார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் செய்தியாளர் சந்திப்பில் பேசினர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications