15 வயது பேத்தியின் திருமணத்தை எதிர்த்த முதியவரை தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்
பெங்களூரு: பெங்களூரில் மைனர் பேத்தியின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த முதியவரை அவரின் மகனே கொலை செய்துள்ளார்.
பெங்களூர் மாவட்டம் தொட்டபல்லபூர் தாலுகாவில் உள்ள கரினஹள்ளியை சேர்ந்தவர் ஈஸ்வரப்பா(70). அவரின் மகன் குமார் தனது 15 வயது மகளுக்கு சுப்ரமணி என்பவரின் மகனுடன் திருமணம் செய்ய முடிவு செய்தார்.

இது குறித்து குமார் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். அதற்கு ஈஸ்வரப்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிளஸ் 1 படிக்கும் பெண்ணுக்கு எதற்கு திருமணம். மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டாம். 18 வயது ஆகும் வரை காத்திருக்கலாம் என்று ஈஸ்வரப்பா தனது மகனிடம் கூறியுள்ளார்.
இதை கேட்டு குமார் ஆத்திரம் அடைந்தார். இந்நிலையில் சைல்டு ஹெல்ப்லைனுக்கு குமாரின் மகளுக்கு திருமணம் நடக்க உள்ளது பற்றி யாரோ தகவல் தெரிவிக்க உள்ளூர் போலீசார் அவரின் வீட்டிற்கு வந்தனர். திருமணத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. ஈஸ்வரப்பா தான் இது குறித்து தகவல் தெரிவித்திருக்க வேண்டும் என்று குமார், சுப்ரமணி ஆகியோர் அவர் மீது கோபம் அடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு சுப்ரமணி ஈஸ்வரப்பாவின் உடலை பிடிக்க குமார் அவர் தலையில் கல்லைப் போட்டார். இதில் படுகாயம் அடைந்த ஈஸ்வரப்பாவை குடும்பத்தார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுப்ரமணியை தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications