மராத்தி vs கன்னடம்: மகாராஷ்டிரா- கர்நாடகா இடையே 3-வது நாளாக பேருந்துகள் ரத்து- மோடி தலையிட கோரிக்கை
பெங்களூர்: மராத்தி மற்றும் கன்னட மொழி அமைப்பினர்களின் பேருந்து ஓட்டுநர்கள்- நடத்துநர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து இன்று 3-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இரு மாநில முதல்வர்கள் கூட்டத்தை சுமூக தீர்வை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
கர்நாடகா- மகாராஷ்டிரா மாநிலங்களின் எல்லையான பெலகாவியில் மராத்தி மொழியை பேச வலியுறுத்தி கன்னட ஓட்டுநர், நடத்துநர் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பதிலடியாக மகாராஷ்டிரா பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் தாக்கினர். இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து இரு மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து வெள்ளிக்கிழமை இரவு முதலே நிறுத்தப்பட்டது. கடந்த 2 நாட்களாக இரு மாநில எல்லைகள் வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவுக்குள் இயக்கப்பட்ட கர்நாடகா தனியார் பேருந்துகளில் கன்னட மொழி எழுத்துகள் அழிக்கப்பட்டு ஜெய் மகாராஷ்டிரா என மராத்தியில் எழுதியும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே கர்நாடகா அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு மராத்தி மொழி அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த கர்நாடகா மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா, கன்னட ஓட்டுநர், நடத்துநர் மீதான தாக்குதல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதனிடையே இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு சுமூக தீர்வு காணும் வகையில் கர்நாடகா- மகாராஷ்டிரா மாநில முதல்வர்களின் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்ட வெண்டும் என்று உத்தவ் தாக்கரே சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
கர்நாடகாவின் பெலகாவி உள்ளிட்ட எல்லை பகுதிகளில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இந்த பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இதனை கர்நாடகா திட்டவட்டமாக நிராகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications