விநாயக சதுர்த்தி கொண்டாட்டம்.. ஆகஸ்ட் 31இல் இறைச்சி விற்பனைக்கு முழு தடை! பெங்களூர் மாநகராட்சி பரபர
பெங்களூர்: நாடு முழுவதும் ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், இது தொடர்பாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி கருதப்படுகிறது. நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
இரு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் பெரியளவில் இல்லாமல் இருந்தது.

படுஜோர்
இப்போது கொரோனா பெரியளவில் குறைந்துவிட்ட நிலையில், இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாகக் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. பொது இடங்களில் பிரம்மாண்டமான சிலைகளை வைக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது எவ்வித வன்முறையும் ஏற்படாமல் இருக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தடை
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்பாகப் பெங்களூரு மாநகராட்சி புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து உள்ளது. அதாவது ஆகஸ்ட் 31 அன்று விநாயக சதுர்த்தி கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் பெங்களூரில் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது பெங்களூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

விநாயகர் சதுர்த்தி
இது தொடர்பாகப் பெங்களூர் மாநகராட்சி சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளது. அதில், "விநாயகர் சதுர்த்தி நாளில் மிருகமாவதை மற்றும் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகிறது. அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதி "விநாயகர் சதுர்த்தி" அன்று, விற்பனைக் கூடங்களில் விலங்குகளைக் கொல்வதற்கும், இறைச்சி விற்பனை செய்வதற்கும் முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டு உள்ளது.

விவாதம்
இதற்கு இணையத்தில் கலவையான விமர்சனங்களே எழுந்துள்ளது. ஒரு தரப்பினர் பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளைக் காக்கும் வகையில் இந்த உத்தரவு உள்ளதாகக் கூறி வருகின்றனர். அதேநேரம் மற்றொரு தரப்பினர், எந்த உணவைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக் கூடாது என்பதை அரசு ஒருபோதும் முடிவு செய்யக் கூடாது என்று சாடி வருகின்றனர்.

கிருஷ்ண ஜெயந்தி
பெங்களூர் மாநகராட்சியின் இந்த உத்தரவு பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அதேநேரம் பெங்களூர் மாநகராட்சி இதுபோன்ற உத்தரவைப் பிறப்பிப்பது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே, கடந்த கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறைச்சி விற்பனைக்கு இதேபோன்ற தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications