Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்கிறது.. அதிர்ச்சியில் பொதுமக்கள்! கர்நாடக அரசு எடுத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் மாநில அரசுக்குச் சொந்தமான நந்தினி பிராண்ட் பாலின் விலை லிட்டருக்கு ₹ 3 உயர்த்தப்படலாம் என்று இப்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பாலின் விலை மிகவும் முக்கியமானது. அனைத்து தரப்பினரும், குறிப்பாகக் குழந்தைகளுக்குத் தரப்படும் முக்கிய உணவாகப் பால் இருப்பதால் அதன் விலை மிக அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வார்கள்.

 Nandini milk brand price in Karnataka will soon expected to go up by ₹3 a litre

ஆனால், கடந்த சில காலமாகவே பாலின் விலையைப் பல தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. அதேநேரம் மாநில அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் பால் விலை பெரியளவில் அதிகரிக்கவில்லை.

நந்தினி: தமிழ்நாடு அரசை பொறுத்தவரை அரசின் ஆவின் நிறுவனம் பால் விற்பனையைச் செய்து வருகிறது. அதேபோல கர்நாடகாவில் கர்நாடகா பால் கூட்டமைப்பு நந்தினி நிறுவனம் பால் விற்பனை செய்து வருகிறது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் கேஎம்எஃப்- கர்நாடகா பால் கூட்டமைப்பின் (கேஎம்எஃப்) நந்தினி பிராண்ட் பால் விற்பனையைச் செய்து வருகிறது. தனியார் பால் நிறுவனங்களின் விலையைக் காட்டிலும் அரசு நிறுவனங்களின் பால் விலை குறைவு என்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இதையே வாங்குகிறார்கள்.

இதற்கிடையே வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நந்தினி பிராண்ட் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்படும் எனக் கூறப்படுகிறது. சமீப்தில் அங்கு நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக கூட்டுறவு அமைப்பு கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், நிலைமையை மேம்படுத்த இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கேஎம்எஃப் தலைவர் பீமா நாயக் தெரிவித்துள்ளார்.

கோரிக்கை: கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் சித்தராமையா தலைமையில் இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் கர்நாடகா பால் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பீமா நாயக் மேலும் கூறுகையில்,, "மாவட்ட பால் கூட்டுறவுச் சங்கங்களும், கேஎம்எப் நிறுவனமும் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்த வேண்டும் கோரிக்கை விடுத்தோம்.

லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்த முதல்வர் அனுமதி அளித்துள்ளார், மேலும் விற்பனை விலை உயர்வின் முழு நிதிப் பலனையும் பால் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் வலியுறுத்தினோம். பால் விலையுடன் சேர்ந்து பால் பொருட்கள் மற்றும் பால் பவுடர் ஆகியவற்றின் விலையை உயர்த்தவும் கோரிக்கை விடுத்தோம்.. இது தொடர்பாக வரும் நாட்களில் முடிவெடுப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர்" என்றார்.

பால் விலை: இந்தக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.என். ராஜண்ணாவும் கலந்து கொண்டார். பால் விவசாயிகளின் நலனைக் காக்கப் பால் விலை உயர்வு தவிர்க்க முடியாது என்று அவர் தெரிவித்தார். முன்னதாக கடந்த நவம்பர் மாதம் நந்தினி பால் விலை லிட்டருக்கு ₹ 3 உயர்த்தப்பட்டது. அப்போது பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை இந்த விவகாரத்தில் தலையிட்டு, விலை உயர்வை லிட்டருக்கு 2 ரூபாயாக மாற்றியமைத்தார்.

அந்த விலை உயர்வு இருந்த போதிலும், கர்நாடகாவில் மற்ற தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் நந்தினி பால் விலை குறைவாகவே இருக்கிறது.. கர்நாடகாவில் நந்தினி பால் விலை லிட்டருக்கு 39 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் தனியார் நிறுவனங்களின் பால் விலை ரூ 48 முதல் ரூ 52 வரை இருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+