கர்நாடகாவில் கரையேறுமா காங்கிரஸ்.! வந்து விழுந்த கேள்வி.. சரத் பவார் சொன்ன பதிலை பாருங்க.. அடடே
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இது தொடர்பாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவார் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
கர்நாடகாவில் இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருக்கிறது.. தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா தான்.

இதன் காரணமாக அங்கே தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அடுத்த மாதம் அங்கே தேர்தல் நடைபெறும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாகச் செய்து வருகிறது.
கர்நாடக தேர்தல்: கர்நாடக தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என பாஜக முயன்றாலும், இப்போது வரை வந்த கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் அவர்களுக்கு எதிராகவே இருந்துள்ளது. கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சியே அதிகப்படியான இடங்களில் வெல்லும் என்று பல சர்வேக்களில் கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சில சர்வேக்களில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையை வெல்லும் கூறப்பட்டுள்ளது. இது சித்தராமையா, டிகே சிவக்குமார் தலைமையில் இயங்கும் கர்நாடக காங்கிரசுக்கு மிகப் பெரிய பூஸ்டை கொடுத்துள்ளது.
இதனிடையே பிரபல ஆங்கில ஊடகத்திற்குத் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவார் அளித்த பேட்டியில், கர்நாடக தேர்தல் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற நல்ல வாய்ப்பு இருப்பதாக சரத் பவார் தெரிவித்தார். கர்நாடகாவில் பாஜக முதலில் 2008இல் ஆட்சியைப் பிடித்தது. அப்போது ஆட்சியைப் பிடிக்க எடியூரப்பா பாஜகவுக்குப் பெரிதும் உதவினார். ஆனால், இந்த முறை எடியூரப்பாவை முன்னிறுத்தாமல் பாஜக தேர்தலைச் சந்திப்பதும் அக்கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்துகிறது.
காங்கிரஸ் வெல்லும்: கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்த சரத் பவார், பாஜக தனது பிரச்சாரங்களில் மாநில பிரச்சினைகளுடன் தேசிய பிரச்சினைகளை இணைத்தாலும் கூட கர்நாடகா தேர்தலை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலின் கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "தேர்தல்களை நாம் இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும்.. மத்திய அரசுக்கான தேசிய தேர்தல் ஒன்று, மாநிலங்களுக்கான தேர்தல் மற்றொன்று. இது எனது தனிப்பட்ட கருத்து.. இதை நீங்கள் ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம்.
அதேநேரம் மாநிலத் தேர்தலை நாம் வித்தியாசமாகப் பார்க்க வேண்டும். கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லை.. கர்நாடகாவில் இப்போது தேர்தல் நடக்க இருக்கிறது. அங்கே காங்கிரஸ் வெற்றி பெறும் என்பதே எனது கணிப்பாக இருக்கிறது. மத்தியிலும் பாஜக ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, மாநிலங்களைப் பொறுத்தவரை யார் வேண்டுமென்றாலும் ஆட்சியில் வெல்லலாம். அது ஒவ்வொரு மாநிலத்தின் கள நிலவரத்தைப் பொறுத்து மாறும். மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும் சரி, மாநிலங்களில் பாஜக அல்லாத கட்சிகள் வெல்ல வாய்ப்பு இருக்கவே செய்கிறது.
மாநில தேர்தல்கள்: மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி, கமல்நாத் முதலமைச்சராக இருந்தபோதும், எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து பாஜக ஆட்சி அமைத்துள்ளது.. ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற பல மாநிலங்கள் பாஜக அல்லாத அரசுகளே ஆட்சியில் இருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டே ஆக வேண்டும்..
இல்லையெனில் பாஜகவைத் தோற்கடிப்பது கடினம்.. அடுத்து வரும் 2024இல் தேர்தலில் பாஜகவை நிராகரிப்பது மிகவும் கடினம். எதிர்க்கட்சிகள் இணைந்து ஏதாவது செய்ய வேண்டும்.. எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணையவில்லை என்றால் எதுவும் செய்ய முடியாது. மகாராஷ்டிராவில் சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. இருப்பினும், சில காலம் மட்டுமே அந்த கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டணி அரசில் இருந்து விலகி, பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications