பெங்களூர் பர்பிள் லைன் மெட்ரோ பணிகள்.. பிளானில் திடீர் மாற்றம்.. ஒயிட்பீல்டுடன் இணைப்பது எப்போது?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் ரயில் திட்டத்தில் பர்பிள் லைன் வழித்தடத்தில் மிஸ்ஸிங் லிங்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் மாற்றம் வந்துள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரில் நம்ம மெட்ரோ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரும் உள்ளது.

New schedule for Purple line in Bangalore metro

இதனால்தான் சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லி, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை, பயணிகள் ரயில் சேவை என கொண்டு வரப்படுகின்றன. ரயில் பயணத்தை இலகுவாக்கினால் மக்கள் சொந்த வாகனங்களை விட்டுவிட்டு கூலாக மெட்ரோவில் பயணிக்கலாம். இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்படாது.

இதனால்தான் இந்த ஏற்பாடு. மேலும் இது போன்று பொது போக்குவரத்துகளில் பயணிக்கும் போது விபத்தில் சிக்கும் பாதிப்புகளும் மிகவும் அரிதானது. இதனால் இந்த பொது போக்குவரத்தான மெட்ரோ, ரயில் சேவைகள் பாதுகாப்பை கொடுக்கின்றன.அந்த வகையில் பெங்களூரில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் படிப்படியாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்த நகரத்தில் பர்பிள் லைன், கிரீன் லைன் என இரு விதமான வழித்தடங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதைத் தொடர்ந்து மஞ்சள் லைன், பிங்க் லைன், நீல லைன் எனப்படும் ப்ளூ லைன் என்ற 3 வழித்தடங்களை ஏற்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதே வேளையில் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்து வரும் பர்பிள் லைன், கிரீன் லைன் நீட்டிப்பு பணிகளும் நடக்கின்றன.

பர்பிள் லைானது பையப்பனஹள்ளி டூ கெங்கேரி வரை இயக்கப்படுகிறது. இதுதவிர கே.ஆர்.புரம் டூ ஒயிட் ஃபீல்டு வரை ஒரு பிட்லைன் இயங்கி வருகிறது. மேலும் கெங்கேரி முதல் சல்லகட்டா வரை பர்பிள் லைனில் நீட்டிக்கும் பணிகள் நடக்கின்றன. பர்பிள் லைன் வழித்தடத்தில் மேலே உள்ள மிஸ்ஸிங் லிங்குகளை இணைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக துரிதமாக நடந்து வருகிறது.

இந்த மிஸ்ஸிங் லிங்குகள் இணைக்கப்பட்டால் பர்பிள் லைன்43 கி.மீ. தூரத்திற்கு இருக்கும். இந்த பர்பிள் லைன் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மிகவும் உதவியானதாக இருக்கும். இந்த நிலையில்தான் மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கண்ட இணைப்பு திட்டத்தை மாற்றியமைத்துள்ளது. அதாவது கே.ஆர்.புரம் டூ பையப்பனஹள்ளி இணைப்பில் பாதுகாப்பு சார்ந்த ஆய்வுகள் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

இதனால் நேற்று கே.ஆர்.புரம் டூ கருடாசார்பால்யா வரை ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த மாத இறுதிக்குள் கே.ஆர்.புரம் டூ பையப்பனஹள்ளி மெட்ரோ ரயில் இணைப்பு இந்த மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாதத்தில் முடிந்து விடுமா என கேட்டதற்கு அதிகாரிகள் அதை உறுதியாக சொல்ல முடியாது. ஏனென்றால் கெங்கேரி டூ சல்லகட்டா இணைப்பில் ஆய்வு பணிகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

முதலில் கே.ஆர்.புரம் டூ பையப்பனஹள்ளி இணைப்பு வழித்தடம் பயன்பாட்டுக்கு வந்த பிறகுதான் கெங்கேரி டூ சல்லகட்டா வழித்தடம் பயன்பாட்டிற்கு வரும். ஒயிட்பீல்டு லைனை கே.ஆர்புரம் டூ பையப்பனஹள்ளி வழித்தடத்தில் இணைக்க கோரிக்கைகள் வருகின்றன. இது மட்டும் நடந்துவிட்டால் 60 ஆயிரம் பேர் கூடுதலாக மெட்ரோவை பயன்படுத்துவார்கள். ஆகஸ்ட் மாதம் வரை 6.3 லட்சம் பேர் மெட்ரோவை பயன்படுத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+