தடுக்கப்பட்ட விவசாயி.. அழுக்கு உடை அணிந்தால் மெட்ரோவில் அனுமதி இல்லையா? மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
பெங்களூர்: பெங்களூரில் விவசாயி ஒருவர், அவரது அழுக்கு உடையின் காரணமாக மெட்ரோ ரயிலில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம்(NHRC) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது
கடந்த 26ம் தேதி காலை வழக்கம் போல மெட்ரோ ரயில் சேவை சுறுசுறுப்பாக இயங்கி வந்தது. பயணிகளோடு பயணிகளாக வயதான விவசாயி ஒருவர், தலையில் மூட்டையுடன் அழுக்கு படிந்த ஆடையில் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தார். தனது பயணத்திற்கான டிக்கெட்டை பெற்ற அவர், ரயிலில் ஏறுவதற்கு நடைமேடை நோக்கி நகர்ந்திருக்கிறார். இடையில் பாதுகாப்பு செக்கிங் இருந்திருக்கிறது. அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த மேற்பார்வையாளர், விவசாயியை ரயிலில் ஏற அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளார்.

முறையான செக்கிங்கிற்கு பின்னரும் கூட அவர் ரயில் ஏற அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து சக பயணி, பாதுகாப்பு மேற்பார்வையாளரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனாலும், விவசாயி ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை. விவசாயி கன்னட மொழி தெரியாமல், டிக்கெட் இருந்தும் ரயில் ஏற முடியாமல் தயங்கி நிற்பதும், மேற்பார்வையாளர் அவரை அனுமதிக்க மாட்டேன் என்று கறாராக இருந்ததும் சக பயணிகளிடையே ஆவேசத்தை எழ செய்தது.
இதனையடுத்து மற்றொரு பயணியும், பாதுகாப்பு மேற்பார்வையாளரிடம் வாக்குவாதம் செய்ய, இறுதியாக விவசாயி ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவியது. இதனையடுத்து, விவகாரம் தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் உரிய விசாரணை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விசாரணையை தொடர்ந்து, விவசாயியை அனுமதிக்காத மெட்ரோ ரயில் பாதுகாப்பு மேற்பார்வையாளரை நிர்வாகம் பணிநீக்கம் செய்திருக்கிறது.
இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பி, கர்நாடக அரசு மற்றும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ஒருவருடைய உடையை அடிப்படையாக வைத்து யாருக்கும் போக்குவரத்து மறுக்கக்கூடாது என்று ஆணையம் கூறியுள்ளது. மட்டுமல்லாது இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக அரசு மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அளிக்கும் பதில் அறிக்கையில், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க எடுக்கப்பட்ட அல்லது எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக குறிப்பிட வேண்டும் என்றும் ஆணையம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications