பெரிய சதி.. பெங்களூரில் 6 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை.. சிக்கிய ஆவணங்கள்-பணம்.. திடுக்கிடும் தகவல்
பெங்களூர்: பெங்களூரில் சிறையில் இருந்தவர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து செயல்பட வைத்த வழக்கு தொடர்பாக 6 இடங்களில் இன்று என்ஐஏ அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது டிஜிட்டல் சாதனங்கள், முக்கிய ஆவணங்கள், ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெங்களூரில் பல இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது 7 கைத்துப்பாக்கி, 4 கையெறி குண்டு, 45 தோட்டாக்கள், 4 வாக்கி டாக்கிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் 6 பேரை அதிரடியாக கைது செய்தனர். அப்போது முகமது உமர், முகமது பைசல் ரபானி, தன்வீர் அகமது, முகமது பாரூக் மற்றும் ஜூனைத் அகமது உள்ளிட்டோருக்கு லஷ்கர் இ-தொய்பா அமைப்பின் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதாவது இவர்கள் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது டி நசிர் என்பவருடன் தொடர்பில் இருந்தார்.
டி.நசீர் என்பவர் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இவர் அவர்கள் 5 பேரையும் மூளைச்சலவை செய்து பயங்கவாத அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்தி உள்ளது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை என்பது என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில் தான் என்ஐஏ அதிகாரிகள் பெங்களூரில் 6 இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த சோதனை முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தான் பெங்களூரில் 6 இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை குறித்து என்ஐஏ அதிகாரிகள் முக்கிய தகவலை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பெங்களூரில் 6 இடங்களில் இன்று என்ஐஏ சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் டீ.நசீர் என்பவரின் தொடர்பு மூலம் மூளைச்சலவை செய்யப்பட்டு பயங்கரவாதிகளாக மாற்றப்பட்ட விவகாரத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. முகமது உமர், முகமது பைசல் ரபானி, தன்வீர் அமது மற்றும் முகமது பாரூக் மற்றும் தலைமறைவாக உள்ள ஜூனைத் அகமது ஆகியோர் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இவர்கள் சேர்ந்து பெரிய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக கருதப்பட்டது. இதுவும் சோதனைக்கு காரணமாகும். தற்போது இந்த சோதனையின் முடிவில் டிஜிட்டல் சாதனங்கள், முக்கிய ஆவணங்கள், ரூ.7.3 லட்சம் ரொக்கப்பணம், உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications