Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் பாகிஸ்தானுக்கு தொடர்பு? சிக்கிய முக்கிய புள்ளி.. நெருங்கும் என்ஐஏ

Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடகா தலைநகர் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கலாம் என என்ஐஏ சந்தேகம் தெரிவித்திருக்கிறது.

பெங்களூரு ஒயிட்ஃபீல்டு அருகே உள்ள புரூக்ஃபீல்டில் அமைந்துள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் கடந்த மார்ச் 1ஆம் தேதி பட்டப்பகலில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில் 10 பேர் வரை படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. எதற்காக குண்டு வெடிக்க வைக்கப்பட்டது? தீவிரவாதிகளின் செயலா? வெளிநாட்டு சதியா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

NIA suspects Pakistan s involvement in the recent Rameswaram cafe blast

முதலில் பெங்களூர் போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 8 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தொடங்கினர். ஆனால், பின்னர் என்ஐஏ வசம் விசாரணை சென்றது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு சந்தேக நபர்கள் இருவர் தற்போது பிடிபட்டிருக்கிறார்கள்.

இது குறித்து என்ஐஏ கூறுகையில், பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வைத்த நபர் மற்றும் குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்ட நபர் என சந்தேகிக்கப்படும் இருவர், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா அருகே ஏப்ரல் 12ம் தேதி கைது செய்யப்பட்டனர். குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் அப்துல் மதீன் அகமது தாஹா, உணவகத்தில் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்ததாக சந்தேகிக்கப்படும் முசாவிர் ஹுசைன் ஷாசிப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் போலியான அடையாளத்துடன் மறைவான இடத்தில் தங்கி இருந்த நிலையில் இன்று அதிகாலை இருவரும் கைது செய்யப்பட்டனர். மத்திய புலனாய்வு அமைப்புகள், மேற்கு வங்கம், தெலங்கானா, கர்நாடகா, கேரள மாநில காவல் துறை ஆகியோரின் துணையோடும், ஒத்துழைப்போடும் இவர்களை கைது செய்யும் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்திருந்தது. இந்நிலையில் இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

“கடந்த 2022ம் ஆண்டு மங்களூரில் ஆட்டோ ரிக்ஷாவில் இதேபோன்று குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நடந்தது. இந்த சம்பவத்தின் போது நாங்கள் 'கர்னல்' என்கிற பெயரை கேள்விப்பட்டோம். இப்போது நாங்கள் கைது செய்திருக்கும் அப்துல் மதீன் அகமது தாஹா, முசாவிர் ஹுசைன் ஷாசிப் இருவரும் கர்னலுடன் தொடர்பில் இருந்திருக்கின்றனர். கர்னல் மத்திய கிழக்கில் இருந்து செயல்பட்டு வருகிறார். குறிப்பாக சொல்வதெனில் அபுதாபியிலிருந்து இயங்கி வருகிறார். அவருக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கும் தொடர்ப்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது” என பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த விசாரணை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அதேபோல தென்னிந்தியாவில் வழிப்பாட்டு தலங்கள், குறிப்பிட்ட நபர்கள் மீது தாக்குதல் நடத்த தேவையான நிதியை கர்னல் என குறிப்பிடப்படும் நபர் கிரிப்டோ பணமாக அனுப்பி வைக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+