Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாரடைப்பால் ரோட்டில் துடித்த கணவர்.. லிப்ட் கேட்டு மனைவி கதறியும் உதவாததால் பலியான சோகம்.. துயரத்திலும் கண் தானம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் உடல்நலக்குறைவால் மனைவியை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த 34 வயது இளைஞருக்கு நடுவழியில் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் சாலையில் விழுந்து துடித்தார். இதனை பார்த்து கலங்கிய மனைவி, அந்த வழியாக செல்லும் வாகனங்களை வழிமறித்து மருத்துவமனைக்கு ‛லிப்ட்' கேட்டு கதறினார். ஆனால் எந்த வாகன ஓட்டிகளும் காரை நிறுத்தவில்லை. இதனால் அந்த இளைஞர் பரிதாபமாக இறந்தார். இந்த சோகத்திலும், மனிதநேயம் மரித்துப்போனாலும் கூட அந்த இளைஞரின் கண்களை குடும்பத்தினர் தானமாக கொடுத்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளனர்.

பெங்களூர் பனசங்கரி 3வது ஸ்டேஜ் பகுதியில் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் வெங்கடரமணன் (வயது 34). இவர் மெக்கானிக் ஆவார். இவரது மனைவி பெயர் ரூபா. கடந்த 14ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு வெங்கடரமணன் மற்றும் அவரது மனைவி ரூபா ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

no-humanity-bengaluru-man-dies-of-heart-attack-on-road-as-passers-by-fail-to-help-after-his-wife-as

அதிகாலையில் சுமார் 3.30 மணிக்கு திடீரென்று வெங்கடரமணனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் நெஞ்சுவலியால் அவதிப்பட்டார். இதையடுத்து அவர் தனது மனைவி ரூபாவை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் கத்ரிகுப்பே ஜனதா பஜார் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு டாக்டர் யாரும் இல்லை.

இதனால் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு வெங்கடரமணனுக்கு இசிஜி செய்யப்பட்டது. அதில் அவர் மாரடைப்பு இருப்பதும் உடனடியாக ஜெயதேவா இருதய மருத்துவமனைக்கு செல்லும்படியும் கூறினர். அங்கிருந்து ஜெயதேவா இருதய மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை.

இதனால் கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு புறப்பட்டனர். கதிரேனஹள்ளி பாலம் அருகே வெங்கடரமணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். வெங்கடரமணன் உயிருக்கு போராடினார். மாரடைப்பால் சாலையில் துடிதுடித்தார்.

இதனால் ரூபா சாலையில் நின்று அந்த வழியாக செல்லும் வாகனங்களை தடுத்து ‛லிப்ட்' கேட்டார். அதிகாலை நேரம் என்பதால் எந்த வாகன ஓட்டிகளும் ‛லிப்ட்' கொடுக்க முன்வரவில்லை. இதையடுத்து ரூபா, வெங்கடரமணனின் தங்கைக்கு போன் செய்தார். அவர் விரைந்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்தார். இதற்கிடையே தான் ஒரு கார் டிரைவர் காரை நிறுத்தினார். வெங்கடரமணன், அவரது மனைவி ரூபா, தங்கை உள்ளிட்ட 3 பேரும் ஜெயதேவா இருதய மருத்துவமனைக்கு சென்றனர்.

அங்கு வெங்கடரமணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் ரூபா, வெங்கடரமணனின் தங்கை கதறி அழுதனர். தங்களுக்கு யாராவது உதவி செய்திருந்தால் வெங்கடரமணன் பிழைத்து இருப்பாரே.. யாரும் உதவி செய்ய முன்வரவில்லையே என்று கதறி அழுதனர். இது அனைவரையும் கலங்க வைத்தது.

இந்த துயர சம்பவத்துக்கு நடுவேயும் கூட வெங்கடரமணனின் குடும்பத்தினர், அவரது கண்களை தானமாக கொடுத்தனர். தங்களுக்கு யாரும் உதவ முன்வராத நிலையிலும் வெங்கடரமணனின் குடும்பத்தினர் கண்தானம் செய்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இதற்கிடையே தான் நடுரோட்டில் வெங்கடரமணன் மாரடைப்பால் உயிருக்கு போராடுவதும், அவரது மனைவி ரூபா வாகன ஓட்டிகளிடம் லிப்ட் கேட்டது அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் வீடியோவை பார்க்கும் பலரும் நிற்காமல் சென்ற வாகன ஓட்டிகளை திட்டி வருகின்றனர். அவர்களின் மனிதாபிமானமற்ற செயலை கடுமையாக சாடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+