Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

8 மணி நேர பயணத்தில் ஏசியே இல்லை.. கொதித்தெழுந்த பயணிக்கு ஆதரவாக தீர்ப்பு.. ஓலாவிற்கு "பறந்த" பைன்

வாடிக்கையாளர் விகாஸ் பூஷனுக்கு வந்த மின்னஞ்சல்தான் இந்த வழக்கில் அவருடைய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: சுமார் 80 கி.மீ தொலைவுக்கு ஏசி வேலை செய்யாத காரை அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் 'ஓலா' நிறுவனத்திற்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.

பெங்களூரை சேர்ந்தவர் இளம் தொழிலதிபர் விகாஸ் பூசன் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி தனது நண்பர்களுடன் 8 மணி நேரம் பயணத்திற்காக முன்கூட்டியே 'ஓலா' வாடகை கார் நிறுவனத்தில் பிரைம் செடானை முன் புக் செய்திருந்தார். இவர் புக் செய்ததை போல குறிப்பிட்ட நேரத்திற்கு கார் இவரது இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தது. இதனையடுத்து தன்னுடைய நண்பர்கள் ஒவ்வொருவராக அழைத்துக்கொண்டு சுமார் 80 கி.மீ தொலைவுக்கு பயணிக்க ஆயத்தமாகியுள்ளார்.

ஆனால் இந்த பயணம் முழுவதும் காரில் ஏசி இயங்கவில்லை. இதனால் விகாஸ் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனையடுத்து அந்த நாளின் பயணத்தின் முடிவில் அவர் காருக்கான தொகையாக ரூ.1,837-ஐ கொடுத்திருக்கிறார். கார் ஓட்டுநரிடம் எதுவும் பேசாமல் அப்போதைக்கு அவரை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அதன் பின்னர் ஓலா வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி நடந்த விஷயத்தை கூறியுள்ளார்.

ஏசி

ஏசி

மேலும் காரின் ஏசிக்கு கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டிருப்பின் அந்த தொகையை திருப்பி தருமாறும் கேட்டுள்ளார். ஆனால், எதிர் தரப்பில் பேசிய ஊழியர்கள், ஏசி-க்கு என எந்த கூடுதல் தொகையும் வசூலிக்கப்படவில்லை என்றும், எனவே எந்த தொகையும் திருப்பி தரப்படமாட்டாது என்றும் கூறினர். இதை கேட்டு ஆத்திரமடைந்த விகாஸ், ஓலாவின் இணை நிறுவனரும் ஏஎன்ஐ டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்டின் எம்டியான பவிஷ் அகர்வாலை அணுக முயற்சித்தார். அவருக்கு நடந்த சம்பவங்கள் குறித்து விரிவாக எழுதி ஒரு மெயிலை அனுப்பி வைத்தார். அதேபோல டிவிட்டரிலும் அவரை தொடர்பு கொள்ள முயன்றார்.

புகார்

புகார்

ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனையடுத்து விகாஸ் காத்திருந்து பிரயோசனம் இல்லையென கருதி அதே ஆண்டு நவம்பர் மாதம் தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைனில் புகார் செய்தார். இந்த புகாரையடுத்து ஓலா நிறுவனம் விகாஸ் முன்வைத்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டது. ஆனால், இந்த பயணத்திற்கான பணத்தை திருப்பி தர மறுத்து ரூ.100 மதிப்புள்ள கூப்பனை வழங்கியது. இதனால் மிகுந்த அவமானமடைந்த விகாஸ் பெங்களூரு நகர மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை நாடினார். தனது புகாரில் ஓலா சேவையில் குறைபாடு இருப்பதாகவும் எனவே தனது பயணத்திற்கான கட்டணத்தை திருப்பி தர வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

விசாரணை

விசாரணை

இந்த வழக்கு விசாரணையில் விகாஸ் தரப்புக்கு ஆதாரமாக ஓலா நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்ட ரூ.100 மதிப்பிலான கூப்பன் முன் வைக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக ஓலா தரப்பில் 45 நாட்களுக்கு பின்னர் அதாவது கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி பதில் தாக்கல் செய்யப்பட்டது. கால தாமதம் காரணமாக இந்த பதிலை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. மறுபுறம் விகாஸ் தரப்பின் புகாரை நீதிமன்றம் ஆராய்ந்தது. அதில் ஆதாரங்கள் அனைத்தும் சரியாக இருந்ததால் அவரது புகாரை ஏற்று ஓலா நிறுவனம் தனது சேவையில் தவறு செய்துள்ளது என்பதை உறுதி செய்தது.

அபராதம்

அபராதம்

மட்டுமல்லாது ஓலா நிறுவனத்திற்கு எதிராக இந்த தரம் குறைவான சேவைக்கு தீர்வாக ரூ.10,000 அபராதமாக விதித்தது. இந்த தொகை விகாஸ் தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவருடைய வழக்கு செலவுக்காக ரூ.5,000 ஆயிரம் கூடுதலாக கொடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இத்துடன் டாக்ஸி கட்டணமாக பெற்ற 1,837 ரூபாயையும் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒலா டாக்ஸி நிறுவனத்திற்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெங்களூரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+