ராணுவத்திற்காக.. கர்நாடகா முழுக்க மசூதிகளில் இன்று சிறப்பு தொழுகை!
பெங்களூர்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் சதிவேலைகளை முறியடித்து உரிய முறையில் அட்டாக் செய்து வருகிறது நம் நாடு. நம் நாட்டின் முப்படைகளின் தாக்குதலில் பாகிஸ்தான் நிலை குலைந்து போய் உள்ளது. இந்நிலையில் தான் நம் நாட்டின் ராணுவ வீரர்களுக்காக கர்நாடகாவில் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகை செய்யப்படும் என்று அமைச்சர் ஜமீர் அகமது கான் உத்தரவிட்டுள்ளார்.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் ஏவுகணை, ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்களை நம் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். அதேபோல் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் தாக்குதலுக்கு உரிய பதிலடியை நம் படை வீரர்கள் கொடுத்து வருகின்றனர். அதேபோல் விமானப்படை, கப்பற்படை முழுவீச்சில் பாகிஸ்தானை அட்டாக் செய்து வருகிறது. ஏவுகணை தாக்குதல்கள் விமானப்படை, கப்பற்படை மூலம் பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டுள்ளது.
இப்படி நம் நாட்டுக்காக இரவு, பகல் பாராமல் முப்படை வீரர்களும் போராடி வருகின்றனர். இந்நிலையில் தான் ராணுவ வீரர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று இன்று கர்நாடகாவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகை நடைபெற உள்ளது. இதனை கர்நாடகா மாநில வீட்டு வசதி மற்றும் வக்பு விவகாரத்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியுள்ளார்.
இதுபற்றி ஜமீர் அகமது கான் கூறுகையில், ‛‛வெள்ளிக்கிழமையான இன்று மாநிலத்தில் வக்பு கட்டுப்பாட்டில் உள்ள மசூதிகள் உள்பட அனைத்து மசூதிகளிலும் நம் ராணுவ வீரர்களுக்காக சிறப்பு தொழுகை செய்யப்பட உள்ளது. நம் நாட்டை பாதுகாக்க ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தில் செயல்பட்ட வீரர்களுக்கான இந்த தொழுகை மேற்கொள்ளப்பட உள்ளது'' என்றார்.
மேலும் இதுதொடர்பாக ஜமீர் அகமது கான் கர்நாடகா மாநில வக்பு வாரியத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். இஸ்லாமியர்களை பொறுத்தவரை வெள்ளிக்கிழமை மதியம் நடக்கும் தொழுகை என்பது மிகவும் முக்கியமானதாகும். அதன்படி இன்று நம் நாட்டின் ராணுவத்துக்காக கர்நாடகா மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற உள்ளது.
இந்த உத்தரவை பிறப்பித்த அமைச்சர் ஜமீர் அகமது கான் கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்னொரு கருத்தையும் தெரிவித்து இருந்தார். ‛‛நாங்கள் இந்தியர்கள். பாகிஸ்தானுக்கெதிராகப் போர்ச் சூழல் வந்தால் போராடத் தயாராக இருக்கிறோம். மோடி, அமித் ஷா தற்கொலை வெடிகுண்டு கொடுத்தாலும் மாட்டிக்கொண்டு பாகிஸ்தான் செல்வேன்'' என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
முன்னதாக கடந்த 7 ம் தேதி கர்நாடகா இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்து கோவில்களிலும் ராணுவ வீரர்களுக்காக சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. கர்நாடகா மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவில் இந்த பூஜைகள் நடந்தன. இதையடுத்து இன்று கர்நாடகா மசூதிகளில் இன்று ராணுவ வீரர்களுக்காக சிறப்பு தொழுகை நடைபெற உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
"ஐ லவ் யூ.." அத்துமீறிய பேராசிரியருக்கு செருப்படி.. கர்நாடகாவில் தக்க பாடம் புகட்டிய கல்லூரி மாணவி












Click it and Unblock the Notifications