டேட்டிங் ஆப் காதல்.. இந்தியரை கல்யாணம் செய்த பாக். இளம்பெண்! ஜோடியை பிரித்து பாக். அனுப்பிய போலீஸ்
பெங்களூரு: டேட்டிங் ஆப் மூலம் இந்தியரை காதலித்த பெண், அவரை நேபாளத்தில் சட்டவிரோதமாக திருமணம் செய்து இந்தியாவிற்கு வந்தார். கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்த பெண்ணை பிரித்து சொந்த நாட்டுக்கே போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.
பெங்களூருவில் சட்டவிரோதமாக நகரில் தங்கியிருந்த 19 வயது இக்ரா ஜீவானியை பெங்களூரு பெல்லந்தூர் போலீஸார் கடந்த மாதம் கைது செய்தனர். அவரை பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது காவலாளி முலாயம் சிங். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டேட்டிங் செயலி மூலம் இக்ரா ஜீவானியை (வயது 19) சந்தித்தார். இருவரும் ஆன்லைனில் தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தேர்ந்தெடுந்த வழிதான் அவர்களை போலீசார் பிரித்து திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

நேபாளம் சென்றனர்
தனது காதலியை திருமணம் செய்ய விரும்பிய முலாயம் சிங், அவரை நேரடியாக இந்தியா அழைத்து வர முயற்சித்திருக்கிறார். ஆனால் ஜீவானிக்கு விசா கிடைக்கவில்லை. இதனால் இந்தியாவிற்கு நேரடியாக அழைத்து வராமல், நேபாளத்திற்கு வரவழைத்துள்ளார். நேபாளத்தில் காதலியை திருமணம் செய்துள்ளார். பின்னர் இந்தியாவிற்கு நேபாளம் வழியாக காதலியை சட்டவிரோதமாக அழைத்து வந்துள்ளார்.

பாஸ்போர்ட் விண்ணப்பம்
பீகாரில் உள்ள பிர்கஞ்ச் சென்று பாட்னா சென்றடைந்த தம்பதியர், குற்றம் பெங்களூரு வந்து ஜுன்னசந்திராவில் உள்ள ஐயப்பன் கோவில் அருகே வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளார்கள். முலாயம் கடந்த செப்டம்பர் 2022 முதல் காவலாளியாக பணியாற்றத் தொடங்கினார். முலாயம் சிங் தனது பெயரை ராவா யாதவ் என்று மாற்றி இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளார். பின்னர் இக்ராவுக்கு ஆதார் அட்டையையும் வாங்கி கொடுத்துள்ளார்.

நேரில் சென்ற உளவுத்துறை
இதனிடையே பாகிஸ்தானில் உள்ள தனது குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள இக்ரா ஜீவானி முயன்றுள்ளார். என்னது இது அடிக்கடி பாகிஸ்தானுக்கு பெங்களூருவில் இருந்து அழைப்பு போகிறதே என்று மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தினர். அதன்பின்னர் மாநில உளவுத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அப்போது தான் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.

பின்னணி என்ன
கர்நாடகா போலீசார் வீட்டிற்குள் நுழைந்து முலாயம் மற்றும் இக்ராவை கைது செய்து அவர்கள் யார் என்ற விவரங்களை சரிபார்த்தனர். இக்ராவை பின்னர் FRRO அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர் ஒரு மாநில பெண்கள் இல்லத்திற்கு மாற்றப்பட்டார். இக்ரா உளவு பார்க்கும் கும்பலின் ஒரு பகுதியாக இருக்கிறாரா என்பதைச் சரிபார்க்க அவரது பின்னணியை போலீஸார் சரிபார்த்து வந்தனர்.

பாக் பெண் ஒப்படைப்பு
இதனிடையே இக்ரா ஜீவானி உளவு கும்பலைச் சேர்ந்தவர் இல்லை என்பதும், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த காதலனை டேட்டிங் ஆப் மூலம் காதலித்து நேபாளத்தில் திருமணம் செய்து கொண்டு சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்தவர் என்பது விசாரணையின் இறுதியில் உறுதியானது. இதையடுத்து இக்ராவின் பாகிஸ்தான் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள்,பஞ்சாப் அழைத்துச் சென்று வாகா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
-
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications