பாஜக தோற்கும் எனக்கூறிய ‛AXIS MY INDIA’ சர்வேயை டெலிட் செய்தாரா மோடி? பகீர் கிளப்பிய சித்தராமையா
பெங்களூர்: லோக்சபா தேர்தலில் பாஜக தோற்கும் எனக்கூறிய ‛ஆக்சிஸ் மை இந்தியா' கருத்து கணிப்பு முடிவை பிரதமர் மோடி டெலிட் செய்ததாக கர்நாடகா முதல்வர் சித்தராமையாக பரபரப்பான கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் 14 தொகுதிகளுக்கு கடந்த 26ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது.

மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மே 7 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டுடு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அதேபோல் கர்நாடகா லோக்சபா தேர்தலிலும் அதிக இடங்களை கைப்பற்ற காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில் தான் பல்லாரி விஜயநகர் லோக்சபா தொகுதியில் முதல்வர் சித்தராமையா பிரசாரம் செய்தார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது பாஜக தோற்கும் என வெளியிடப்படும் சர்வேயை பிரதமர் மோடி டெலிட் செய்வதாக பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார். இதுபற்றி சித்தராமையா கூறியதாவது: நரேந்திர மோடிக்கு இந்த தேர்தலில் அதிகாரத்தை இழந்து விடுவோம் என்ற கவலையில் உள்ளார். ஏனென்றால் இந்த தேர்தலில் வெல்வோம் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை.
லோக்சபா தேர்தல் தொடர்பாக அவர்கள் (பாஜக) எடுத்த சர்வேயின்படி 200 முதல் 220 தொகுதிகள் வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் நான் இன்னொரு விஷயத்தை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். ‛ஆக்சிஸ் மை இந்தியா' என்ற அமைப்பு சார்பில் தேர்தல் தொடர்பாக சர்வே மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது.
இந்த சர்வேயில் பாஜக 200 முதல் 210 இடங்களில் மட்டுமே வெல்லும் என தெரிவிக்கப்பட்டது. உடனே பிரதமர் மோடியின் அரசு தலையிட்டு டெலிட் செய்தனர். 210 சீட் மட்டுமே வெற்றி பெறுவார்கள் என்று தெரிந்தால் மக்கள் பாஜகவுக்கு ஓட்டு போடமாட்டார்கள் என்ற பயத்தில் டெலிட் செய்தனர்'' என பரபரப்பாக குற்றம்சாட்டி உள்ளார்.












Click it and Unblock the Notifications