தமிழகத்துக்கு ஒரு ஜல்லிக்கட்டு.. கர்நாடகாவிற்கு ஒரு கம்பாலா.. கலாச்சார காவலன் பிரணாப் செய்தது என்ன?
பெங்களூர்: கர்நாடகத்தின் 200 ஆண்டுகளுக்கு முன் பழமைவாய்ந்த கம்பாலா போட்டிக்கு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
Recommended Video
எந்த ஒரு மாநிலமாக இருந்தாலும் அதற்கென ஒரு கலாச்சாரம், வீர தீர செயல்கள், நம்பிக்கை, பழக்க வழக்கங்கள், மரபு உள்ளிட்டவை இருக்கும். இவை தொன்று தொட்டு வரும் பழக்கமாக இருக்கிறது.
இதை எந்த காரணத்திற்காகவும் யாரும் விட்டுக் கொடுக்க மாட்டோம். அந்த வகையில் தமிழகத்திற்கு வீரத் தீர விளையாட்டு என்றால் அது ஜல்லிக்கட்டு தான், அந்த காலத்தில் காளையை யார் அடக்குகிறார்களோ அவர்களே வீரமகன் என கருதப்பட்டனர்.

மதுரை சுற்று வட்டாரம்
ஆனால் நாளடைவில் இந்த பழக்கம் விளையாட்டு போட்டியாகவே மாறிவிட்டது. இதற்காக இன்றும் கூட மதுரை சுற்று வட்டார இளைஞர்கள் தங்களை தயார் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது.

ஓபிஎஸ்
இதையடுத்து மெரினாவில் ஜல்லிக்கட்டு புரட்சியே நடந்தது. ஏராளமான மக்கள் வெளியூர்களிலிருந்து வந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மிகவும் அமைதியான முறையில் நடந்த இந்த போராட்டத்தை பார்த்த அப்போதைய முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சட்டசபையில் அவசர சட்ட மசோதாவை தாக்கல் செய்து மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்தவரும் பிரணாப்தான்.

சீறி பாயும் காளைகள்
இதையடுத்து அடுத்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சீறி பாயும் காளைகளையும் அதை அடக்க பாயும் இளைஞர்களையும் காணும் போது பண்டைய கால சம்பவங்கள் கண் முன் தெரிகின்றன. தமிழகத்தை போல கர்நாடகாவுக்கு ஒரு கம்பாலா போட்டி ஆகும்.

200 ஆண்டுகள்
கம்பாலா போட்டிகள் கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் நடத்தப்படுவதாகும். இந்த விளையாட்டில் எருமை காளைகளை சேற்றில் விரட்டிச் செல்வர். 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இவ்விளையாட்டு போட்டிக்கு விலங்குகள் நல வாரியத்தால் தடை விதிக்கப்பட்டது.

மார்ச் மாதம்
இந்த போட்டிகள் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடத்தப்படுவதாகும். இந்தப் போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையால் அந்த மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கர்நாடக அரசு அவசர சட்ட மசோதாவை அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றியது. இந்த மசோதா ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியின் பார்வைக்கு சென்றது. அவரும் இதற்கு ஒப்புதல் அளித்தார். அது முதல் கம்பாலா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications