தனியார் நிறுவனங்களும் நாட்டின் சொத்து.. தனியாரை அவமதித்தவர்களுக்கு பெங்களூரு ஒரு பாடம் -பிரதமர் மோடி
பெங்களூரு: தனியார் நிறுவனங்களை மதிக்காதவர்களுக்கு பெங்களூரு மாநகரம் நல்ல பாடமாக திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ரூ.27,000 கோடி மதிப்பிலான மத்திய அரசின் 5 நெடுஞ்சாலை மற்றும் 7 ரயில்வே திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். பெங்களூருவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், "இந்தியாவின் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெங்களூரு கனவு நகரமாக திகழ்கிறது.

ஒரே இந்தியாவுக்கான பிரதிபலிப்பாக பெங்களூரு இருக்கிறது. பெங்களூரு நகரத்தின் வளர்ச்சி லட்சக்கணக்கானவர்களின் கனவுகளை வளர்க்கிறது. எனவேதான் கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு பெங்களூருவின் வளர்சிக்காக இடைவிடாமல் பாடுபடுகிறது.
டபுள் எஞ்சின் அரசாங்கம் இருப்பதால் ரயில்வே, சாலை, மெட்ரோ, மேம்பாலம், சுரங்கப்பாதை போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு டிராபிக் ஜாம் இல்லாமல் பெங்களூரு இருக்கிறது. புறநகர் பகுதிகளையும் பெங்களூருவுடன் இணைப்பதற்கான பணிகளை செய்து வருகிறோம். இந்த நடவடிக்கைகள் கடந்த 40 ஆண்டுகளாக நடந்து வந்தாலும் டபுள் எஞ்சின் அரசாங்கம் இருப்பதால் உடனே அவற்றை செய்து முடிக்க முடிகிறது.
40 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் திட்டங்களை 40 மாதங்களில் முடித்துக்காட்டுவோம். கடந்த 8 ஆண்டுகளில் ரயில்வே இணைப்புகள் முற்றிலுமாக உருமாறியுள்ளன. இந்திய ரயில்வே வேகமாகவும், தூய்மையாகவும், நவீனமாகவும், பாதுகாப்பாகவும், குடிமக்களுக்கு எளிதாகவும் கிடைக்கிறது. நாம் சிந்தித்தே பார்க்க முடியாத சிக்கலான இடங்களுக்கெல்லாம் ரயில்களை இயக்கிவிட்டோம்.
விமான நிலையங்கள், விமானங்களில் இருப்பதை போன்ற அனுபவத்தை ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் வழங்க இந்திய ரயில்வே முயற்சித்து வருகிறது. கதி சக்தி திட்டம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதுடன் தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தை வலுப்படுத்துகிறது. பெங்களூரு நகரத்தின் வெற்றி 21 ஆம் நூற்றாண்டில் தற்சார்பு இந்தியாவுக்கான உந்துகோளாக இருக்கிறது.
பெங்களூரு தொழில், கண்டுபிடிப்பு போன்றவற்றில் வளர்வதற்கு பின்னால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்குகள் உள்ளன. இந்தியாவின் தனியார் நிறுவனங்களை அவமதித்து வருவபர்களுக்கு பெங்களூரு நகரம் பாடமாக இருக்கிறது. அரசு நடத்தும் நிறுவனமாக இருந்தாலும் சரி, தனியார் நிறுவனமாக இருந்தாலும் சரி, இரண்டுமே நம் நாட்டின் சொத்துக்கள் என்பதில் உறுதியாக நம்புகிறேன். இரண்டுக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்." என்றார்.
-
"ஐ லவ் யூ.." அத்துமீறிய பேராசிரியருக்கு செருப்படி.. கர்நாடகாவில் தக்க பாடம் புகட்டிய கல்லூரி மாணவி -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications