பெங்களூரின் பல இடங்களில் செம மழை.. தருமபுரி, ஈரோடு, திருவண்ணாமலை, திருவள்ளூரிலும் காற்றுடன் மழை
பெங்களூர்: வெப்ப சலனம் காரணமாக பெங்களூர் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. கத்திரி வெயில் வெப்பத்தை இது குறைத்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தின், செவ்வாய்ப்பேட்டை, திருவூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, சேவூர், குண்ணத்தூர், களம்பூர், மலையாம்பட்டு, ராட்டினமங்கலத்தில் கனமழை பெய்தது.

இதேபோல, தருமபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில், ஆலங்கட்டி மழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில், சத்யமங்கலம், திம்பம் பகுதிகளில் மழை பெய்தது.
இதேபோல கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரிலும், மாலை முதல் ஆங்காங்கு மழை பெய்தது. யஷ்வந்தபூர், சஞ்சய்நகர், ஹெப்பால் உள்ளிட்ட வடக்கு பெங்களூரில் காற்றுடன் நல்ல மழை பெய்தது. இருப்பினும், தெற்கு மற்றும் கிழக்கு பெங்களூரில் மாலை 5 மணிவரை மழை பெய்யவில்லை. மேக மூட்டம் காணப்பட்டது. எனவே இரவு நேரத்தில் மழை பெய்யலாம் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சென்னையை பொறுத்தளவில், வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. மிகவும் புழுக்கமான வானிலை நிலவுவதாக மக்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications