பெங்களூர் - மைசூர் ஹைவேயில் இரவில் நடக்கும் சம்பவம்.. வாகன ஓட்டிகளே அலர்ட்! இப்படி கூட செய்வாங்களா
பெங்களூர்: பெங்களூர் - மைசூர் எக்ஸ்பிரஸ் சாலையில், சாலையின் நடுவே மரத்துண்டுகள், இரும்பு கம்பிகள் வைத்து வாகனங்களை கவிழ்க்க முயற்சிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கொள்ளை நோக்கில் திட்டமிட்டு வாகனங்களை விபத்துக்குள்ளாக்கும் சதி நடப்பதாக ஏற்கனவே புகார் இருக்கும் நிலையில் மீண்டும் அதே மாதிரியான சம்பவங்கள் அதிகரித்து இருப்பது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெடுஞ்சாலைகளில் நடைபெறும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாக அண்மைக்காலமாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளை குறிவைத்து இந்த கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

அதிலும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் போது இத்தகைய திருட்டு பயம் அதிமாக இருக்கிறது என்பது லாரி டிரைவர்கள் மற்றும் மாநிலம் விட்டு மாநிலம் வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில், பெங்களூர் - மைசூர் எக்ஸ்பிரஸ் வே சாலையில் வாகனங்களை விபத்துக்கு உள்ளாக்கி கொள்ளை சம்பவங்கள் நடப்பதாக குற்றச்சாட்டு அதிகரித்துள்ள நிலையில் தற்போது அது தொடர்பான அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பெங்களூர் - மைசூர் எக்ஸ்பிரஸ் சாலையில் கெங்கேரி என்ற இடத்தில் சாலையில் மரத்துண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. சாலையின் வலது ஓரத்தில் டிவைடரை ஒட்டி வைக்கப்பட்டு இருக்கும் இந்த மரத்துண்டுகளை கவனிக்காமல் வாகன ஓட்டிகள் ஏற்றினால் வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. இப்படி விபத்தை ஏற்படுத்தி திருடும் முயற்சியில் கொள்ளை கும்பல் ஈடுபடுவதாக வாகன ஓட்டிகள் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர்.
காரில் சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது காரில் இருந்த கேமரா படம் பிடித்த காட்சிகளையும் வெளியிட்டு தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார். வாகன ஓட்டிகளின் உயிரை பற்றி துளி கூட கவலையின்றி கொள்ளையர்கள் செய்யும் இந்த கொடூர செயல்கள் பெரும் அதிர்ச்சிக்குரியதாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெறும் இதுபோன்ற கொள்ளை முயற்சிகளை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகளை போலீசார் எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

அதேபோல வெளிமாநில பதிவெண் கொண்ட லாரிகள் சென்றாலும் அவர்களிடம் வேண்டும் என்றே வம்பிழுத்து திருடும் சம்பவங்கள் நெடுஞ்சாலைகளில் நடப்பதாக வாகன ஓட்டிகள் கூறியுள்ளனர். எனவே நெடுஞ்சாலைகளில் பயணம் மெற்கொள்ளும் பயணிகள் குறிப்பாக இரவு நேரத்தில் செல்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து பணிகளை அதிகரித்து, இத்தகைய கொள்ளையில் ஈடுபடுவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications